திங்கள், 6 ஏப்ரல், 2015

மோடியின் இலங்கைப்பயணம் சீனாவை சீண்டிப்பார்க்குமா?

modi-maithee

இதயச்சந்திரன்:-

திரு.மோடி,ஒரு மிகச் சிறிய நாட்டின் பக்கத்திலுள்ள அணுஆயுத வல்லரசு இந்தியாவின் பிரதமர் அவர். ஆசியாவில் சீனாவை அடக்க அமெரிக்க யானைப்பாகன் பயன்படுத்தப்போகும் அங்குசம்.


இவ்வாறாக இலங்கை அரசியலில் இருந்து இந்திய தேசத்தை வர்ணிக்கலாம்.

மறுபுறம் பார்த்தால் மகிந்த ஆட்சி உருவாகுவதற்கு உதவிய நாடு. அமெரிக்காவையும், சீனாவையும் ஓரங்கட்ட சீபாஒப்பந்தத்தை நிறைவேற்றிடத் துடித்து தோல்வியுற்ற நாடு என்றும் கூறலாம்.


80 ஆரம்பத்தில் உருவான அமெரிக்க- இந்திய பனிப்போர், 87 இல் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக புதிய வடிவம் அடைந்தது. இன்றும் அந்த ஒப்பந்தம் இருக்கிறது. ஆனால் கொழும்புத் துறைமுகத்தில் ஒரே மாதத்தில், இரு தடவைகள் சீனாவின் அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் வந்ததால், ஒப்பந்தம் கேள்விக்குள்ளானது.

2009 இற்குப்பின்னர், இந்தியாவின் அமெரிக்காவுடனான பனிப்போர் சீனாவுடன் தாவி, இப்போது துறைமுகநகர திட்டம் கிடப்பில் போடும் அளவிற்கு முறுகல் நிலையை எட்டியுள்ளது.

அதேவேளை ஆசியப்பிராந்திய புதிய சமநிலை உருவாக்கத்தில் வியட்நாமிற்கு அடுத்ததாக இலங்கையில்தான் அமெரிக்க-இந்திய தந்திரோபாயக்கூட்டு, இயங்குநிலையை வந்தடைதுள்ளதாகக் கணிப்பிடலாம்.

இந்த வருடத்திற்கான சீனாவின் மொத்த உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சி 6.5% ஆகக்குறையுமென மதிப்பிட்டாலும், ஆசியாவில் அதன் மேலாதிக்க விரிவாக்கத்தை இந்தியா பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கிறது. இதனடிப்படையிலேயே அமெரிக்காவுடன் ஒரு தற்காலிக தந்திரோபாயக் கூட்டு ஒன்றினுள் தன்னை பிணைத்துக்கொள்ள இந்தியா முன்னிற்பதைக் காணலாம்

ஆழமாக நோக்கினால்  அமெரிக்க சார்பு அணிகளின் பலவீனத்தையும் இந்தியா பயன்படுத்திக் கொள்ள முற்படுகிறது என்பதை அவதானிக்கலாம்.

அதாவது அரச வட்டி வீதத்தை 1.75 ஆகக் கீழிறக்கிய தென்கொரியாவின் பொருண்மியப் பலவீனமும், இக்கட்டான காலத்தில் நிலைத்து நிற்கக்கூடிய தாங்குதிறன் (stress test ) ஐரோப்பிய வங்கிகளுக்கு இல்லை என்கிற மதிப்பீடுகளும், திறைசேரி திவாலாகிப்போன கிரேக்கத்தின் கையறுநிலையும், இலங்கையின் புதிய ஆட்சிக்கு கடன் கொடுக்க மறுத்த அனைத்துலக நாணய நிதியமானது (IMF) பொருளாதாரம் நிலைகுலைந்து போகும் உக்ரேய்ன் இற்கு ஓடோடிச்சென்று 17.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க முன்வரும் காரணங்களையும் இந்திய புரிந்து கொள்கிறது.

அமெரிக்காவின்பங்குச் சந்தை இப்போது ஜொலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஐரோப்பாவின் பொருளாதாரம் அதன் மத்திய வங்கியிடம் (ECB)கையேந்திக் கொண்டிருக்கிறது

கார்பொரேட் முதலீட்டாளர்கள் ஆசியாவை நோக்கி நகர்கின்றார்கள். சீனாவின் வளர்ச்சி வீதம் குறைவடைவதனால், அவர்கள் முதலீட்டிற்கான வேறு சாதகமான நாடுகளைத் தேடுகின்றார்கள். அதுமட்டுமல்லாது அமெரிக்க- சீன அதிபர்களின் விஜயமானது இந்தியாவை நோக்கி இக் கார்பொரெட்களை திரும்பிப் பார்க்க வைக்கிறது.

ஆக மொத்தம் ஆசியாவைப் பொறுத்தவரை இந்தியாவிற்கே இது  சாதகமாக அமையுமென எதிர்பார்க்கலாம்.

அதேவேளை சீனாவின் முத்துமாலை சுற்றிவளைப்பினை உடைத்தெறிய வேண்டுமாயின், யாரோடு கூட்டுச் சேர்ந்தாவது, தன்னைப்பொருண்மிய ரீதியாகவும், படைத்துறைரீதியாகவும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற முடிவிற்கு டெல்லியின் தென் வளாகம் வந்திருப்பது போல் தெரிகிறது

இதில் விசித்திரமான நகர்வுகளும் நடைபெறுகின்றன. அதாவது அமெரிக்க- இந்திய இராஜதந்திர நெருக்கத்தால் சீனாவின் முதலீடுகளும் இந்தியாவில் அதிகரிக்கிறது.

தற்போதுள்ள 400 மில்லியன் சீன முதலீட்டினை, 10 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் பல உடன்பாடுகளில் மோடியும் ம் க்ஷி ஜின்பிங்கும் கடந்த வருடம் கைச்சாத்திட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் பராக் ஒபாமாவின் அண்மைய விஜயம் 4 பில்லியன் முதலீட்டைக்கூடக் கொண்டுவரவில்லை

இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை, அமெரிக்காவோடு ஒரு இணக்கப்பாடு தனக்கு இருப்பதுபோல் மைத்திர்-இரணில் ஆட்சி அதிகாரத்திற்கு காட்டிக்கொள்ள இந்தியா முனைகிறது.

ஆட்சி மாற்றமானது  நாடாளுமன்றத்  தேர்தலோடு முற்றுப்பெறும் வரை, இதே போக்கில் இந்தியா தனது காய்களை நகர்த்துமென எதிர்பார்க்கலாம்

.நா.அறிக்கை தொடக்கம், முன்னைய ஆட்சியாளர்களால் களவாடப்பட்டதாகச் சொல்லப்படும் பணத்தினை மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவரும் விவகாரம்வரை, இந்தியாவின் அனுசரணையை அரசும் எதிர்பார்க்கும், இந்தியாவும் அதற்காகப் பாடுபடுவது போல் காட்டிக்கொள்ளும்.

நாட்டின் வருமானத்தைப் பொறுத்தமட்டில், கையும் கணக்கும் சரியாக இருப்பதால் மேலதிக கடன் வழங்கத் தேவையில்லைஎன்று கிறிஸ்டின் லகாட்டின் ( இவர்தான் ஐ.நா.சபையின் அடுத்த பொதுச் செயலாளர் என்று நம்பப்படுகிறது) அனைத்துலக நாணய நிதியம் இலங்கையைக் கைவிட்ட விவகாரமும் இந்தியாவிற்கே சாதகமாக அமையப்போகிறது

அதாவது உறுதியான ஆட்சி ஏற்படும்வரை, வாக்குறுதிகளை வழங்கும் வைபவங்களே நிகழும். பிரித்தானியப்பிரதமர் டேவிட் கமரூன் அவர்களை மைத்திரிபால சிறிசேன சந்தித்தாலும் இதுதான் நடக்கும்

இந்த வகையான இடைக்கால நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ளும் போது, ‘குறைநிரப்பும்பங்கினை இந்தியா மனமுவந்து ஏற்கும் நிலை தோன்றுமென்பதே நிஜமானது.

இந்த விஜயத்தின் போது ஏற்கனவேயுள்ள சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் (FTA ) ஆழ- அகலங்கள் விரிவுபடுத்தப்படும் என்கிறார்கள். எப்படியிருந்தாலும் இந்தியாவிற்குச் சார்பான வர்த்தக உபரி ( Trade Surplus) அப்படியே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் வெகுவாக அதிகரிக்கும்

இந்த அச்சத்தினை வெளிப்படுத்தும் ஜாதிக ஹெல உறுமயவின் பட்டாலி சம்பிக்க ரணவக்க, இலங்கையின் பொருளாதாரமானது முற்றுமுழுதாக இந்தியாவின் பிடிக்குள் அகப்படுவது ஆபத்தானது  என்கிறார். அதாவது இதனை இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், ‘கடனை ஓரிடத்தில் இருந்து மட்டும் வாங்காமல், எல்லா வல்லரசுகளிடமிருந்தும் பகிர்ந்து பெற்றுக்கொள்ளுங்கள்என்பது போலிருக்கிறது சம்பிக்கவின் அறிவுரை

அதாவது மகிந்தர் விட்ட தவறை நீங்களும் விடாதீர்கள்என்று சொல்ல வருகிறாரா? இல்லையேல் இந்தியா குறித்தான மகாவம்ச மயக்கத்திலிருந்து பேசுகிறாரா? என்று தெரியவில்லை.

இருப்பினும் சிங்களத்தின் இராஜதந்திர மைய ஓட்டத்திலிருந்து முரண்படாமல் அவர் பேசுகிறார் என்பதுதான் உண்மை வருகை தரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ‘அமைச்சர்என்கிற வகையில் இவரையும் சந்திப்பாரென எதிர்பார்க்கலாம்.

இவரின் வருகையை இரண்டு தரப்பினர் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு தரப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு. மறுதரப்பு மைத்திரி- மகிந்த   கட்சி ( கள்).

கூட்டமைப்பைப் பொறுத்தவரை, 13 வது திருத்தச் சட்டத்தில் எஞ்சியுள்ளவற்றை வடமாகாண சபையில் பிரயோகிப்பதற்கு, புதிய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அத்தோடு வடமாகாணசபையிலுள்ள அமைச்சுக்கள் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கும், நீண்ட கால வேலைத்திட்டங்களுக்கும் இந்தியாவின் நேரடி உதவி கிடைக்க வேண்டும் என்கிற வேண்டுகோளையும் விடுப்பார்கள். ஆனால் சம்பூரில் கடற்படை பிடித்து வைத்திருக்கும் மக்களின் நிலங்கள் குறித்து எவர் பேசுவார் என்று தெரியாது

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகத்தெரிகிறது. நோர்வே தூதுவர் மற்றும்  அமெரிக்க இராஜதந்திரிகள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களிடம் கேட்ட இன அழிப்பு தீர்மானம் ஏன்?’ என்ற கேள்வியை, இந்தியப்பிரதமரும் கேட்பார் என எதிர்பார்க்கலாம்

மேற்குலகத்திற்கும் இந்தியாவிற்கும் பெரும் இராஜதந்திர நெருக்கடியை இத்தீர்மானம் கொடுத்திருந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் இவர்கள் விடுபடவில்லை. வடக்கிற்கு செல்லும் இராஜதந்திரிகள் யாவரும் தமது உரையாடல்களில் இக்கேள்வியையும் இணைப்பார்கள்.

அடுத்ததாக, கொழும்பு அதிகார மையத்தைப் பொறுத்தமட்டில், மைத்திரி தரப்பினரே மோடியோடு நெருக்கத்தை ஏற்படுத்த முனைவார்கள் என்று கூறலாம். வரலாற்று ரீதியான அரசியல் உறவும் அதற்கு ஒரு காரணம். .தே.கட்சியானது மேற்குலகிற்குச் சார்பானது என்கிற இந்தியாவின்  இறுகிப்போன நிலைப்பாடும்‘, இக்கூற்றிக்கு வலுவூட்டும்.

சீனாவை நோக்கிய முனைவாக்கம் தடுக்கப்பட வேண்டும்என்பதோடு, மேற்குலக ஆதிக்கத்தை அனுமதிக்கும் தரப்பு அதிகார மையத்தில் வந்துவிடக்கூடாது என்பதிலும் இந்திய வெளியுறவு கொள்கைப் பிரிவு கவனம் செலுத்த முற்படும் ஆகவே மைத்திரியோடு மகிந்தாவையும், நரேந்திர மோடி அவர்கள் சந்திக்கும் வகையில் இந்தியத் தரப்பு நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று நம்பலாம்

பூகோள எதிர்கால அரசியலையும், இந்துசமுத்திரப் பிராந்திய அரசியலையும் இணைத்துப் பார்க்கும்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மைத்திரியின் தலைமையிலான, ஆனால் மகிந்த அணியின் ஆதரவு பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்பதை ஒரு தரப்புவிரும்பும்.

அச் சக்தி எதுவென்பதை தேர்தலின் போதும், அது முடிந்த பின்னரும் மக்கள் தெரிந்து கொள்வார்கள்.

ஆட்சிமாற்றத்தின் திசையை, தமக்குச் சார்பாக திருப்ப வருகிறாரா மோடி என்கிற பேச்சும் காதில் விழுகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி:- தமிழ் தேசிய சிந்தனைப்பள்ளி என்ற வலைதளத்திலிருந்து காப்பி செய்யப்பட்டது.  www.eelamnews.com கட்டுரையாளர் நண்பர்.இதயச்சந்திரன் அவர்களால் பதிவிடப்பட்டது.

வியாழன், 2 ஏப்ரல், 2015

சீனிச்சர்கரை,ஆளைக்கொல்லும் விசம்-எச்சரிக்கை..

எச்சரிக்கை !!!
  தயவு செய்து இந்தச் சீனிச்சக்கரை விஷத்தை நீங்களும் உங்கள் குழந்தைகளும் உன்னாதீர்கள். மன்னிக்கவும்! யாரும் உன்னவேண்டாம் மன்னிக்கவும் .நாய்க்குக் கூட குடுக்கவேண்டாம். sugar disease is a slow poison இதுதான்.

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்துத் தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்தச் சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்? இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும்முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. 

பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.இந்த வெள்ளைச் சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1-.கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரியவியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.This is true so Can we avoid

டாக்டர் டேவிட் ரூபன் என்ற ஊட்டச்சத்து நிபுணர் சர்க்கரையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். “சர்க்கரையின் உண்மைப் பெயர் சுக்ரோஸ். அதன் இரசாயன மூலக்கூறு C12H22O11. இந்த சர்க்கரையில் 12 கார்பன் அணு (atom), 22 ஹைட்ரோஜன் அணு, 1 ஆக்ஸீஜன் அணு உள்ளது. இதனைத் தவிர்த்து வேறு எதுவும் சர்க்கரையில் கிடையாது. கொகைனின் இரசாயன மூலக்கூறு C17H21NO4. இரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடு கிடையாது. சர்க்கரையில் நைட்ரோஜன் அணு மட்டும் இல்லை என்பதே சிறிய வேறுபாடு.

நண்பர்களே இன்றய ஊடகங்களால் மறைக்கப்பட்ட சதி எனவும் கூறலாம். பணத்திற்காக நம் பாமரமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.......!நண்பர்களே (முக்கியம்) படித்துவிட்டு பகிருங்கள

பனை கருப்பட்டி,பனை கல்கண்டு,நாட்டுச்சர்கரை, கலப்படம் அற்றதாக பார்த்து வாங்கவும்.மேலும்,கலப்படம் இல்லாத இயற்கை உணவு என்ற பெயரில் மக்களை ஏமாற்ற ஒரு கும்பல் கிளம்பியுள்ளது..எச்சரிக்கை

புதன், 1 ஏப்ரல், 2015

லிங்கமாக அவதாரம் எடுத்த சட்டிச்சித்தர்

சித்தர் என்போர் சித்தில் வல்லவர் என்பது பொதுக் கருத்து. அவர் நீர்மேலும் நெருப்பிலும் நடந்திடுவர். இரும்பைப் பொன்னாக்குவர். ஒரு நேரத்தே பலவிடங்களில் தோன்றிக் காட்சி அளிப்பர். காடு மேடு மலையென அலைந்து உழலுவர் எனச் சொல்லி மாளாது இவர் திறம்.
இவர்கள் கந்தல் ஆடை உடுத்தியும், ஆடை துறந்தும் திரிவதால் மக்கள் சித்தர்களின் பெருமைகளை உணர்ந்தறியாமல் அவர்களை பொருட்படுத்தாமல் விட்டுவிடுவதே பெரு நிகழ்வு. காலச் செலவில் மக்களுக்கு சித்தர்களின் பெருமைகள் விளங்கலாயிற்று. இவர்கள் கடுமையான தவங்களை இயற்றித்தான் சித்தர் நிலைக்கு தம்மை உயர்த்திக் கொண்டுள்ளனர் என்ற உண்மை தெரியவந்துற்றது. சித்தர்கள் புறத் தோற்றத்தில் மிக எளியராகக் காணப்படினும் உள்ளகத்தே மதிப்பறியாத ஒன்பான்மணிகளை (நவரத்தினம்) கொண்டிருந்தனர். அந்த மணிகளை உலகோர் உணரும் பொருட்டு செயலாற்றி வந்துள்ளனர்.
இறைவனின் முழுநிறைவான திருவருள் கிட்டப் பெற்றவர்களே சித்தர் என்று ஆகிட முடியும். இந்தப் புது நாகரிகக் காலத்திலும் இறைப் பேரருளால் சித்தர்கள் தோன்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் சென்னை நடுவண் சிறை அமைந்த புழல் பகுதியின் காவாங்கரையில் சட்டி சித்தர் எனப்பட்ட மௌனகுரு கண்ணப்ப சுவாமிகள் தோன்றி பல இறும்பூதுகளை (miracles) நிகழ்த்தியுள்ளார். 

சித்தரின் வருகை
மியான்மர், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில் தவம் புரிந்த சட்டி சித்தர் இறுதியாக கடலில் மிதந்தபடி திருவொற்றியூர் கடற்கரையில் ஒதுங்கயதை பொது மக்கள் பார்த்துள்ளனர்.  இவர் பிறப்பிடம் யாது? பெற்றோர் யாவர்? என்பன அறியக் கிடைக்கவில்லை. முதன்முதலாக திருவொற்றியூர் வந்து சேர்ந்த இவர் ஆடையின்றி அம்மணராக சென்னை நகர் முழுவதும் சுற்றி அலைந்து திரிந்து விட்டு புழலில் உள்ள காவாங்கரைக்கு வந்தார். அங்கு இவரது கோலம் கண்ட ஒரு அம்மையார் இவரது இடுப்பைச் சுற்றி ஆடை கட்டினார். அது முதல் சித்தர் அங்கேயே தங்கலுற்றார்.
சித்தருக்கு சடைகட்டி மயிர்க் கற்றையாக இருந்ததால் அவ் அம்மையார் ஒரு அன்பரை அமர்த்தி மொட்டை அடிக்க ஏற்பாடு செய்தார். நீள் சடையும் அழுக்கும் கோர்த்திருந்த அவரது நிலையையும் கண்ட அந்த அன்பர் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு மொட்டை அடிக்கத் தொடங்கினார். அதுபோது மிக உயர்ந்த நறுமண வீச்சு அங்கே எழுந்தது. அந்நறுமணம் எங்கிருந்து வருகின்றது என்று நின்றிருந்தோர் திகைப்புற்று நோக்க அது சித்தரின் தலையிலிருந்து தான் வீசுகின்றது என்பதை இறுதியாக அறிந்தனர். அப்போது தான் அவர் மாபெரும் தவப்பெரியார் (மகான்) என்பதை அங்கிருந்தோர் அறிந்து கொண்டார்கள். அது முதல் சித்தர் அவ்விடத்தில் இருந்து கொண்டே பல இறும்பூதுகளை நிகழ்த்தி வந்தார். ஆடை அணிவித்த அம்மையார் வீட்டில் அவர் தங்கி இருந்த போது முன்கூட்டியே அன்பர்களது வருகையை அறிந்து கொள்வார். தன்னை நாடி வரும் அன்பர்கள் தமது குறைகளைச் சொல்வதற்கு முன்பே அதை அறிந்து நீங்கியதன் காரணமாக அன்பர்கள் அவரது தீவர பக்தர்கள் ஆயினர். 
சட்டி சித்தர் என்ற பெயர்க் காரணம் 
சித்தர் கன்னிமார் எழுவரை (சப்த மாதர்) தாயாக வரித்து அன்னபூரணியை ஏற்றிப் புகழ்ந்து அட்சய பாத்திரம் ஒன்றை வேண்டிப் பெற்றார். அந்த சட்டியில் இருந்து வேண்டிய அளவு உணவுப் பொருள்கள் குறைவில்லாது வந்து கொண்டே இருந்தன. அதனால் அன்பர்களுக்கு வயிறார உணவிடும் வழக்கத்தை அவர் மேற்கொண்டார். இதன் காரணமாக சட்டி சித்தர் என்ற பெயர் இவருக்கு உண்டாயிற்று.
ஒரு சமயம் வயலில் வேலை பார்த்து விட்டு களைப்புற்றிருந்த குடியானவர்களை உணவு உண்ண அழைத்தார். அவரது சட்டியில் சிறிதளவே உணவு இருந்தது. அதைக் கண்ணுற்ற அக் குடியானவர்கள் ''இந்த சிறு கவள உணவை எப்படி எங்கள் எல்லோருக்கும் பரிமாறுவீர்'' என்றனர். சித்தர் அனைவரையும் வரிசையாக அமரச் சொல்லி முதல் ஒருமுறை சோறு பரிமாறினார். சட்டியிலோ சோறு அள்ள அள்ளப் பெருகியது. அடுத்து இரண்டாவது முறையும் அந்த உழவர்களுக்கு வயிறாரச் சோறு பரிமாறினார். இந்த விந்தை கண்டு உழவர்கள் வியப்புற்று அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர்.
சித்தர் தாம் வைத்திருந்த சட்டியிலிருந்து அன்பர்களுக்கு சோறு பரிமாறி வந்ததைக் கண்டு மகிழ்வுற்ற அம்மையாரின் கணவர் இராகவன், "சட்டிச் சோறு கண்ணா" என்று அன்புடன் அழைத்தார். அதுவே கண்ணப்ப சுவாமி என்று வழங்க காரணமாகியது. 
சித்தரின் பரிவு
சித்தர்கள் பேசும்போது  ஏதடா ... எங்கேயடா.. என்று ஒருமையில் பேசுவர். உரிமை கலந்த பாச உணர்வு கொண்ட பேச்சாக அவை இருக்கும். அதே போல் சட்டி சித்தரும் மற்றவர்களிடம் பேசும்போது நைனா .. என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவார். அறியாமல் செய்யும் பிழைகளை அருள் உள்ளத்தோடு அவர் களைய முற்பட்டார். பொற்கொல்லர் ஒருவர் கொலுசு செய்து தருவதாகக் கூறி ஒருவரிடம் பணம் பெற்றுக் கொண்டார். ஆனால் வாங்கிய பணத்தைச் செலவு செய்துவிட்டார். எனவே அவரிடம் பொன் வாங்கப் பணம் இல்லை. கொலுசு செய்யச் சொன்னவர் கேட்டபோது நாளை கொலுசு தருகிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார். சொன்னபடி நாளை கொலுசு தராவிட்டால் மானம் போய்விடும் என்று வேதனையுற்ற பொற்கொல்லர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அதற்காக நஞ்சை வாங்கி வைத்திருந்த போது கடைசியாகச் சித்தரைப் பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. சித்தரைப் பார்க்க வந்த பொற்கொல்லரை அமர வைத்து மூன்று கூழாங்கற்களை எடுத்து பக்கத்தே வைத்தார். அவை பொன்னாக மாறின. அவற்றை கொல்லரிடம் கொடுத்து போய்யா ..  பொழச்சுக்க .. என்று சொல்லி அனுப்பினார்.
சித்தரின் இறும்பூதுகள்
ஒரு போது பிராமணர் ஒருவர் சித்தரைக் காண்பதற்காக வந்தார். உணவு வேளையில் வழக்கம் போல் அன்பர்களை உட்கார வைத்து உணவு பரிமாறினார். அந்நாட் பொழுதில் எல்லோருக்கும் மீன் குழம்பு பரிமாறப்பட்டது. இதனால் பிராமணர் தனக்கு உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதற்கு சித்தர் கவலைப் படவேண்டாம், "நீ, எதை நினைக்கிறாயோ அது வரும் என்று கூறி பிராமணரை அமர வைத்தார். பிராமணர் எனக்கு கத்தரிக்காய் குழம்பு போதும் என்றார். மீன் குழம்பு கரண்டியை எடுத்து  இலையில் ஊற்றிய போது அது கத்தரிக்காய் குழம்பாக ஊற்றியது. இது கண்டோர் வியப்புற்றனர்.  
ஒரு சமயம் அன்பர்கள் ஆண்டார் குப்பம் என்ற ஊரில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்லும் போது சித்தரையும் வருமாறு அழைத்தனர். நீங்கள் முன்னே போங்கள் நான் பின்னே வருகின்றேன் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார். அங்கே முருகப் பெருமானுக்கு திருமுழுக்காட்டு நடத்தப்பட்ட போது சித்தருக்கே திருமுழுக்காட்டு  நடப்பது போல் அவர்கள் காட்சி கண்டனர்.  அவரையே தம் நினைவில் கொண்டுள்ளதால் தமக்கு ஏற்படும் மனப்பிறழ்ச்சியே (பிரமை) இது என்று அவர்கள் நினைத்தனர். ஊர் திரும்பிய அவர்கள் நீங்கள் ஏன் வரவில்லை என அவரை வினாவினர். என் மேல் பால் ஊற்றினார்கள் அதை நீங்களும் பார்த்தீர்கள் ஆனால் நான் வரவில்லை என்று சொல்கிறீர்களே என்று கேட்டார். இவ்வகையில் பல தலங்களுக்கு செல்வதை அவர் வழமையாகக் கொண்டிருந்தார்.  
திருப்பதிக்குப் போகப் போவதாக அவர் சொல்வார். அப்படி அவர் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில் அவர் திருப்பதியில் இருந்ததைப் பலர் பார்த்துள்ளனர். திருப்பதியில் பேசிய பேச்சுகளைக் கூட அவர் நினைவுபடுத்துவார். நோய்களை அகற்ற பச்சிலை மூலிகைகளைத் தருவதும் அவரது பணியாக இருந்தது.
சோறு கேட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் சித்தர் செல்வது வழக்கம். ஒருபோது அவ்வாறு சோறு கேட்டு ஒரு வீட்டின் முன் நின்றார். அவ்வீட்டார் வறுமையில் தத்தளித்ததால் அவருக்கு சோறு போட முடியவில்லை. அதை அறிந்த அவர் உரூபாய் கட்டு ஒன்றை அங்கு போட்டு விட்டுச் சென்றார். 
பகைவர்களை அடியவராக்கிய நிகழ்வு
சித்தரின் கொள்கைகளுக்கு மாறுபட்ட சிலர் அவருக்கு துன்பங்களையும் தொல்லைகளையும் ஏற்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர்கள் மீது சித்தர் சிறிதளவேனும் சினந்ததில்லை. ஒரு நிலையில் அவர்கள் சித்தரை கொலை செய்துவிடுவது என்று தீர்மானங் கொண்டதை அறிந்த சித்தர் மண்சட்டியை கையில் ஏந்திக் கொண்டு தன்னந்தனியராக காட்டின் ஊடே நடந்து சொல்லலானார். கொலை நோக்கர் அவரைப் பின் தொடர்ந்து வந்தனர். அப்போது விந்தையிலும் விந்தை ஒன்று நிகழ்ந்தது. சித்தர் தம் தலை சட்டியிலும், பிற உறுப்புகள் எட்டுத் திசையிலும் சிதறி இருக்குமாறு வைத்துவிட்டார். கொல்வதற்குப் பின் தொடர்ந்தோர் நமக்கும் முன்னமேயே நமது நண்பர்கள் வேலையைச் செவ்வையாக முடித்துவிட்டார்கள் என்று மகிழ்ந்தபடித் திரும்பினர். அவர்கள் திகைப்புறமாறு சித்தர் சட்டியை ஏந்தியபடி அவர் எதிரே வந்தார். இதனால் அவர்கள் அஞ்சி நடுக்குற்றனர். இந்த நிகழ்வை இவர்கள் தம் நண்பர்களிடம் தெரிவித்த போது தாமும் அவரைப் அவ்வண்ணம் பார்த்த்தாகச் சொல்லினர். அதே நேரம் வியாசர்பாடி, செங்குன்றம், மூலக்கடை, அயனாவரம், பொன்னேரி, எண்ணூர், மீஞ்சூர், மாதவரம், மணலி ஆகிய இடங்களிலும் சித்தரைக் கண்டதாகக் கூறினார்கள். அவரது வல்லமையையும் பெருமையையும் உணர்ந்து கொண்ட கொலை முயற்சியாளர்கள் நாளாவட்டத்தில் அவரின் அடியவராகிப் போயினர். சித்தரின் நவகண்ட யோக நிலையை பல்வேறு சமயங்களில் கண்டாரும் உண்டு.
சட்டி சித்தர் கண்ணப்ப சுவாமிகளின் ஜீவ சமாதி
1961 பிலவ ஆண்டு புரட்டாசித் திங்கள் மகாளய அமாவாசை அன்று அஸ்த நட்சத்திம் கூடிய திங்கட் கிழமை நன்னாளில் ஜீவ சமாதி ஆக வேண்டும் என்று எண்ணம் மேற்கொண்டவராக அடியவர்களிடம் அந்த நாளின் போது வந்து சேருமாறு பணித்தார். நீ மண்வெட்டி கொண்டு வா, நீ கூடை எடுத்து வா, திருமணத்திற்கு போக வேண்டும் பெரிய மாலை கொண்டு வா என்று சொன்னார்.
நான் சமாதி ஆகிவிட்டால் உடனே புதைத்து விடக் கூடாது. குழியிலேயே 41 நாள்கள் வைத்திருத்துவிட்டு 41 ஆம் நாள் நான் லிங்கமாக  மாறிய பிறகு செய்ய வேண்டியவற்றைச் செய்யலாம் என்று சொன்னார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று எவருக்கும் அப்போது விளங்கவில்லை.
குறிப்பிட்ட அந்நாளில் எல்லோரும் வந்தாகிவிட்டது. அவர்களை கவனித்த கண்ணப்ப சுவாமிகளாகிய சட்டி சித்தர் ஆக வேண்டிய வேலையைப் பாருங்கள் என்றதும் பாட்டு பாடச் சொல்கிறார் என நினைத்த அன்பர்கள் பாடினார்கள். சித்தர் சின்முத்திரையுடன் அமைதி ஆனார். அப்போது தான் அடியவர்களுக்கு உண்மை விளங்கிற்று. உடனே கண்ணப்ப சுவாமிகள் இருக்கும் இடத்தில் குழி தோண்டி அவரை ஆகம முறைப்படி அமர வைத்தார்கள். 41 நாள்கள் குழியை மூடாமல் பலகை கொண்டு மூடி அதன் மேல் விளக்கை ஏற்றினார்கள். 41 ஆம் நாள் பலகையை எடுத்துப் பார்த்த போது சித்தர் லிங்க வடிவாய் ஆகி இருப்பதைக் கண்டனர். சுற்றிலும் மேடை அமைத்து முடித்தனர். அதன் மேல் பின்னாளில் கண்ணப்ப சுவாமிகளின் திருவுருவச் சிலை கிழக்கு நோக்கி பதிக்கப்பட்டது.
இவரது சமாதி கோவிலில் அமாவாசை பௌர்ணமி நாள்களில் இரவு 12 மணிக்கு சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன. கோவில் நாள்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி  அளவும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் திறக்கப்படுகின்றது. இன்றும் மக்கள் தம் வேண்டுதல்கள் நிறைவேறவும் குறைகள் தீரவும் சட்டி சித்தர் எனும் கண்ணப் சுவாமிகளை வேண்டிக் கொண்டு அவரது சமாதியில் ஊதுவத்தி ஏற்றுகின்றனர்..

மேற்சொன்ன செய்திகள் மௌனகுரு கண்ணப்ப சுவாமிகள் சமாதி ஆசிரம சங்கத்தாரால் 2011 இல் வெளியிடப்பட்ட 50 ஆம் ஆண்டு குரு பூசை மலரில் இடம் பிடித்துள்ளன

புதன், 11 பிப்ரவரி, 2015

மக்கள் முதல்வர் அம்மா அவர்கள்- கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெ.கு. தீரன்சாமிக்கு கடிதம்- ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் ஆதரவுக்கு நன்றி ---

மக்கள் முதல்வர் அம்மா  அவர்கள்- கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெ.கு. தீரன்சாமிக்கு கடிதம்- ஸ்ரீரங்கம்  இடைத்தேர்தல் ஆதரவுக்கு நன்றி ---

பவானி கூடுதுறை சன்கேமேஸ்வரர்,திருக்கோவில் ,சேலம் ,1008 லிங்கம்,திருச்சங்கோடு அர்த்தநாரிஸ்வரர் திருக்கோவில்,உள்ளிட்ட திருக்கோவில்களில் மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் ,மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெ.கு.தீரன்சாமி சிறப்பு வழிபாடு நடத்தியபோது எடுத்தப்படத்தின்- நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கைச் செய்தி


திங்கள், 26 ஜனவரி, 2015

ஸ்ரீரங்கம் ,சட்ட பேரவைத் தேர்தல் அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றி!! எதிர் கட்சிகளுக்கு டெபாசிட் காலி!! கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி சபதம்.

 எதிர் வரும் ஸ்ரீ ரங்கம் சட்ட பேரவைத் தேர்தல் 
அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றி 
 எதிர் கட்சிகளுக்கு டெபாசிட் காலி!

 உலக தமிழர்களின் உன்னதத்  தலைவி டாக்டர். புரட்சித்  தலைவி அம்மா அவர்களின் ஸ்ரீ ரங்கம் தொகுதி வேட்பாளர் எஸ்.வளர்மதி அவர்கள்  இரட்டை இலை சின்னத்தில் அமோக வெற்றி பெறுவது உறுதி - எதிர் கட்சிகளுக்கு டெபாசிட் காலி! இதுவும் உறுதி 

 எனவே மக்கள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின்  வேட்பாளருக்கு எதிராக எதிர்கட்சிகள்  களம் காண்பது கேளிக்கூத்து! 
 
வருகின்ற 02.02.2015 அன்று முதல் ஸ்ரீ ரங்கம் சட்டப் பேரவை தேர்தலில் அம்மா அவர்களின் அ.இ.அ.தி.மு.க.வேட்பாளருக்கு - இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிக்க  அணிவகுக்க உள்ளோம்.

திருப்பூர்,கரூர்,கோவை ,ஈரோடு,சேலம் மாவட்ட கட்சி நிர்வாகிகள் 02.02.2015 அன்று வைரமடையில் அணி திரண்டு,ஸ்ரீரங்கம் நோக்கி புறப்பட கொங்கு தமிழர் கட்சியின் சார்ப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  
 
எதிர் வரும் ஸ்ரீ ரங்கம் சட்ட பேரவைத்  தேர்தலில்  நமது கட்சியினர் அ.இ.அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குச்சேகரித்து  - அம்மாவின் இரட்டை இலை சின்னம் அமோக வெற்றி பெறவும் - எதிர் கட்சிகளுக்கு டெபாசிட் காலியாகவும் தீவிர பிரசாரம் மேற்கொள்ள கொங்கு தமிழர் கட்சியின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இப்படிக்கு 
 டி.கே.தீரன்சாமி 
 தேசிய தலைவர் - அமைப்பாளர் - கொங்கு தமிழர் கட்சி 


கொங்கு தமிழர் கட்சியின் தேசியஅமைப்பாளர் டி.கே.தீரன்சாமி,குடியரசு தின உரை நிகழ்த்தினார்

இனிய குடியரசு தின விழா - 2015


ஜனவரி 2015 -26

டி.எஸ்.சண்முகம்,டி.கே.தீரன்சாமி ,தலைமைஆசிரியர்
    இன்று காலை 9 மணிக்கு காங்கயம் நகராட்சி தொட்டியபட்டி அரசு பள்ளியில் கொங்கு தமிழர் கட்சியின் தேசிய தலைவர் அமைப்பாளரும் - தொட்டியபட்டி அரசு பள்ளியின் கிராம கல்விக்குழு உறுப்பினருமான டி.கே.தீரன்சாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து - பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி - குடியரசு தின உரை நிகழ்த்தினார்.

  
அரசு பள்ளியின் தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும்
வரவேற்றார்கள் இப்பள்ளியின் PTA தலைவரும் - கல்விக்குழு உறுப்பினருமான டி.கே.சண்முகம் நன்றி கூறினார்.

 

இப்பள்ளிக் குழந்தைகள் நலன் காத்திட பள்ளி வேலை நேரமான காலை 9 மணிக்கும் மாலை 4 மணிக்கும் அரசு டவுன் பஸ் வசதியை அரசிடம் வேண்டுவது எனவும் இந்த பஸ் வசதி அனைத்து மக்களுக்கும் பயன் தரும் வண்ணம் பஸ் வழி தடம் போக்குவரத்து பனி மனை , ஐயாசாமி நகர் காலனி , போக்குவரத்து நகர் , ராஜீவ் நகர் , தொட்டியபட்டி செம்மடை , வரதப்பம்பாளையம் , நெய்க்காரன் பாளையம் வழித்தடமாக அமைய வேண்டுவது என தீர்மானம் செய்யப்பட்டது. நன்றி.



 தகவல் PTA தலைவர் டி.எஸ்.சண்முகம் 

திங்கள், 17 நவம்பர், 2014

கொடிய வைரஸ் சமூக வலைதளங்கள்தான்- வித்யாபாலன்அதிரடி தாக்குதல்..



டர்ட்டி பிக்சர்ஸ் திரைப்படத்தின் மூலம் 
ஒட்டுமொத்த இந்தியத்திரையுலகையும்,
உலக சினிமா ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்தவர்.
ஒருநடிகை எப்படி இருக்ககூடாது
என்பதையும்,செல்லுலாய்டு என்ற கனவுத்தொழிற்சாலையில் 
கால்பதிக்க துடிக்கும்
இளம்பெண்களின் உயிர்நாடியாக டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் 
வாழ்ந்துகாட்டியவர்
வித்யாபாலன்.

அன்றைய நடிகை டி.ஆர்.ராஜ்குமாரியிலிருந்து இன்றைய நடிகைஅஞ்சலி
வரை படும்துன்பங்களை,பாலியல் வன்கொடுமைகளை அப்படமாக நவீன சினிமா
தொழிற்சாலையில் பதியப்பட்டபடம்தான் டர்ட்டி பிக்சர்ஸ்.கிட்டத்தட்ட நமது
தமிழ்த்திரையுலகின் கவர்சிக்கன்னியாக பார்க்கப்பட்ட சில்க்சுமிதாவின் சினிமா
வாழ்வியலை-வித்யாபாலன் டர்ட்டி பிக்சர்ஸ்சில் வாழ்ந்துகாட்டியதாக
சொல்லப்பட்டது.

சமூகவலைதளங்கள்,மீடியக்களுக்கு வித்யா மீது கழுகுப்பார்வை உண்டு.
அவரது செய்திக்கு அதிவேகமான பார்வையாளர்கள் உண்டு.அந்த அடிப்படையில்
இன்றைய தினம் தினத்தந்தி நாளிதழில் சமூக வலைதளங்கள் மீது வித்யாபாலனின்
அதிரடி தாக்குதல்.என்ற தலைப்பில் நேர்காணல் வெளியானது...அது பற்றி...

அதில்..சமூகவலைதளங்கள் தொடர்பான இரண்டு கேள்விகள்..

1.இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் நீங்கள் ஏன் எழுதுவதில்லை.?

வித்யா-.. எனக்கு அதில் நாட்டமில்லை,வலைதளங்களில் மற்றவர்களோடு பகிர்ந்து
கொள்வதற்காக சில விசயங்கள்தான் இருக்கின்றன.ஆனால் பலரும்
பகிர்ந்துகொள்வதைப் பார்த்தால் வரைமுறை இல்லாமல் போய்விட்டதை
உணர்ந்துகொள்ளமுடிகிறது.பாத்ரூம் போவதைக்கூட டுவிட்டரில் தெரிவித்து
விட்டுத்தான் போகிறார்கள்.மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் எதையும்
செய்யக்கூடாது என்பது ஒருமனோவியாதியாக மாறிவிட்டது.

2.வலைதளங்களால் மக்களுக்கு நன்மை இல்லை எங்கிறீர்களா..?

வித்யா-..எதையுமே பயன்படுத்தும் விதத்தில்தான் நன்மையும்,தீமையும் விளையும்.
பலருடைய நட்புக்கு வலைதளங்கள் துணையாக இருப்பது உண்மைதான்.எத்தனை
பேருடைய குடும்பவாழ்க்கை இதனால் பறிபோகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஒருவரது குடும்ப வாழ்க்கையின் மிக ரகசியமான விசயங்கள்கூட வலைதளத்தில்
பகிர்ந்து கொள்ளப்படுவது அநாகரிகத்தின் உச்சகட்டம்.இன்று உலகம் முழுவதும்
பரவியிருக்கும் கொடிய வைரஸ் சமூக வலைதங்கள்தான்.இதில் சிக்கி
சின்னாபின்னமான குடும்பங்கள் பல உள்ளன... நன்றி:-தினத்தந்தி

வித்யாபாலனின் கூற்று நூறு சதம் சரியானது அல்ல...ஆனால் அதே நேரத்தில்
சமூக வலைதளப்பதிவர்கள் சிந்திக்கவேண்டிய செய்தி..உலகம் ஒரே குடையின்
கீழ் கொண்டு சேர்த்த பெருமை சமூகவலைதளங்களுக்கே உரித்தானது...
சமூகவலைதளங்களை இதுபோன்று சுதந்திரமாக தொடர்ந்து பயன்படுத்த
வேண்டுமானல் நாம் ஒவ்வொருவரும் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்படவேண்டும்.
சீர்கேடுகளை முன்வைக்கும் தளங்களை புறந்தள்ளவேண்டும்..

கருத்துக்களை பகிரவும்

இவன்:-டி.கே.தீரன்சாமி,கொங்குதமிழர்கட்சி,
http://theeranchinnamalai.blogspot.in,http://kongutamilar.blogspot.in

புதன், 29 அக்டோபர், 2014

சிங்களபேரினவாதி அநாகரிகதர்மபாலவுக்கு-இந்தியப்பேரரசு தபால் தலை-கொங்கு தமிழர் கட்சி கண்டனம்..!




சிங்களப்பேரினவாதத்தின் பிதாமகன் அநாகரிகதர்மபாலாவின் 150-வது
பிறந்த
வருடத்தை முன்னிட்டு நமது மைய அரசு  அவருக்கு தபால்தலை
வெளியிட்டுள்ளது.அநாகரிகதர்மபாலா ஒரு சிங்கள இனவெறியர் . ஹிட்லரின்
வழியில் 'சிங்களர்கள் ஆரியர்கள். அவர்களே இலங்கையை ஆளப்பிறந்தவர்கள்'
என்றார்.

தமிழர்களும், முஸ்லீம்களும் இரண்டாந்தரக் குடிமக்களாகத்தான் நடத்தப்பட
வேண்டும் என்ற விஷ எண்ணத்தை விதைத்ததில் அநாரிக தர்மபாலாவுக்கு
முக்கியமான இடம் உண்டு. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் குறித்து
பல மோசமான நச்சுக்கருத்துக்களைச் சொன்னவர்.

இலங்கையில் சிங்களம்தான்
ஆட்சி மொழி, சிங்களர்களுக்குத் தமிழர்கள் அடிமைகளாக இருக்க வேண்டும்
என்று முன்னெடுக்கப்பட்ட சிங்கள பௌத்தப் பேரினவாதத்துக்கு அநாகரிக
தர்மபாலாவும் ஒரு முன்னோடி.

தமிழர்கள் மீதான இனப்படுகொலையை அடுத்து முஸ்லீம்கள் மீதான
தாக்குதல்களும், அவர்கள் வழிபாட்டு தலங்கள் மீதான வன்முறைகளும் கொஞ்சம்
கொஞ்சமாகக் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

இதை மேற்கொண்டுவரும் சிங்கள
இனவாத அமைப்பான பொதுபல சேனா, அநாகரிக தர்மபாலாவைத்தான் தங்கள்
முன்னோடியாக முன்னிறுத்துகிறார்கள்.

"இலங்கை அனைத்து மதத்தினருக்கும் சொந்தமானது என்ற கொள்கையை எதிர்க்க
வேண்டும். அப்படிச் செயல்பட வேண்டுமானால் அனைத்து சிங்களர்களும் அநாகரிக
தர்மபாலா போல ஆக வேண்டும்" என்று பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர்
வண.கலபொடே அத்தே ஞானசேர தேரர் சமீபத்திய பேட்டி ஒன்றில்
தெரிவித்துள்ளார்.

‘இலங்கை அரசின் இனப் படுகொலைகளை விசாரிக்க வேண்டும். ராஜபக்‌சே
போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும்’ என்ற கோரிக்கைகளைத் தமிழர்கள்
முன்வைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் மோடி தலைமையிலான அரசு, சிங்களப்
பேரினவாதக் கருத்தாக்கத்துக்கு வலுசேர்த்த அநாகரிக தர்மபாலாவுக்கு ஏன்
தபால் தலை வெளியிட வேண்டும்? என்ற கேள்வி தமிழர்களிடையே எழுந்துள்ளது,

ஏற்கனவே சுப்பிரமணியன்சுவாமி இலங்கை அதிபர் ராசபக்சேவுக்கு பாரதரத்னா
விருது வழங்க வேண்டும் என்று கூறினார்.

மைய அரசின் இத்தகைய செயல்களுக்கு எமது கொங்கு தமிழர் கட்சி கண்டனத்தை
பதிவு செய்கிறது.

இவன்"-
டி,கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்
கொங்கு தமிழர் கட்சி

செவ்வாய், 28 அக்டோபர், 2014

விஜயகாந்த் மக்களுக்கு என்ன செய்தார்..?கொங்கு தமிழர் கட்சி கேள்வி...?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது கடும் விமர்சனங்களை தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் இன்று விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் கூறியுள்ளார்.
 
ஜெயலலிதா ஊழல் புரிந்தார்....என்ற கருத்தெல்லாம் 2011 சட்டமன்ற தேர்தல் கூட்டணி அமைத்த போது தெரியாதா...?
 
இத்தனை நாளாய் தூங்கிவிட்டு இப்போது எல்லாம் குறை என்று விமர்சிக்கும் விஜயகாந்த், தான் அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணி மூலம் என்ன நன்மையை இதுவரை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தந்தார்..?
 
எங்கே காவேரி நடுவர் மன்றத்தை அமைக்காவிடில் கூட்டணியில் இருப்பதை பரிசீலிக்க வேண்டும் என்று ஒரு கருத்தை விஜயகாந்த் அவர்கள் கூறமுடியுமா...?
 
மீனவர் பிரச்சினை குறித்து இதுவரை ஒரு அறிக்கையை விடுத்துள்ளாரா..?
 
அம்மையார் ஜெயலலிதா சட்டப்பேரவை வருவது இருக்கட்டும்....இதுவரை என் நீங்கள் வரவில்லை...? எதிர்க்கட்சி பணி ஆற்றவில்லை...?
 
Thanks,
Soundar

திங்கள், 27 அக்டோபர், 2014

விஜயின் கத்தியில் "தன்னூத்து"-நிஜத்தில் திருச்சி "சூரியூர்"கிராமம்

விஜயின் கத்தி திரைப்படத்துக்கு கடந்த 24-10-2014 அன்று எமது கொங்கு தமிழர் கட்சி ஆதரவு கொடுத்தது...எமது செய்தி சமூக வலைதளங்கள் மற்றும் தினமலர்,தினமணி நாளிதழ்களில் வெளிவந்தது.  ஏரளாமான விஜய் ரசிகர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.நாளிதழ்களின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் செய்தி நிருபர்களான தினமணி-ராமன்பிள்ளை,தினமலர் பெரியசாமி ஆகியோர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துகொள்கிறேன்.

இன்னொரு தரப்பில் நடிகருக்கு ஏன் ஆதரவு...லைக்கா..சுபாஸ்கரன் அல்லிராச,கோத்தபயெ ராசபக்சே என்ற அடிப்படையில் எமது கொங்கு தமிழர் கட்சியின் ஆதரவுக்கு மேற்படி கேள்விகள் எழுந்தன...அதற்கு விஜயின் கத்தி படத்தில்-தண்ணீரின் முக்கியத்துவத்தை,விவசாயிகளின் வாழ்வாதரத்தை பற்றி விஜய் பேசும் வசனங்களை எடுத்துக்காட்டி...விளக்கம் அளித்தோம்.

கூடுதலாக கத்தி படத்தில் தண்ணீர் கொள்ளையர்களின் கோரப்பிடியில் தன்னூத்து என்ற கிராமம் காட்டப்படுகிறது.அதுபோல திருச்சியில் சூரியூர் கிராமம் பெப்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது...தண்ணீர் இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட கீழ்கண்ட உண்மை நிகழ்வைப்படியுங்கள்....கருதுக்கூறுங்கள்,,,பகிர்வு செய்யுங்கள்...

உண்மை கதைக்காக இரண்டு நிமிடம் படியுங்கள்
-------"கத்தி" படமும் "சூரியூர்" கிராமமும்-------
 
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பின்புறம் அமைந்துள்ள ஓர் அழகிய கிராமம் தான் “சூரியூர்”. ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன இங்கு தொன்றுதொட்டு வரும் ஒரே தொழில் விவசாயம் தான். திருச்சியை சுற்றி காவிரியாற்றின் தண்ணீரை நம்பி தான் விவசாயமே உள்ளது. காவிரி வறண்டு போனால் பல ஏக்கர் நிலம் பாலைவனம் ஆனதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சூரியூரில் சிறு அளவு வாய்கால் பாசனம் கூட இல்லை. வானம் பார்த்த மானாவரி பூமி தான். தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோதும் முப்போகமும் விளைந்த பூமி தான் சூரியூர். காரணம், சூரியூரை சுற்றி முன்னோர்கள் விட்டுசென்ற எண்ணற்ற ஏரிகளும், குளங்களும்தான் நிலத்தடிநீரை வற்றாமல் பார்த்துக்கொண்டது.
 
இதை செயற்கைக்கோள் உதவியோடு சூரியூரில் உள்ள தண்ணீர் வளத்தை கண்டறிந்த பெப்சி நிறுவனம், தனது தொழிற்சாலையை நிறுவ ஆசைப்பட்டது. பெப்சி(Pepsi) நிறுவனத்தின் ஆசையை நிறைவேற்ற அவர்களுடன் கைகோர்த்தது திருச்சியில் உள்ள LA Bottlers Pvt Ltd நிறுவனம். LA Bottlers Pvt Ltd நிறுவனத்தின் உரிமையாளர் அடைக்கலராஜ் அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடர்ந்து 3 முறை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
 
சூரியூரில் பாட்டில் (Glass Bottle) தயாரிக்கும் தொழிற்சாலை வரப்போவதாக தவறான தகவலை அப்போதைய சூரியூர் ஊராட்சிமன்ற தலைவர் மலர்விழி மூலம் சொல்லி தொழிற்சாலையின் கட்டிட வேலையை தொடங்கி 2012 ம் ஆண்டுமுதல் தொழிற்சாலை இயங்கியது. அடுத்த மூன்றே மாதத்தில் படிப்படியாக விவசாய கிணற்றில் தண்ணீர் வற்ற தொடங்கியது. அப்போதுதான் சூரியூர் மக்களுக்கு தெரியவந்தது இயங்கிகொண்டிருப்பது பெப்சி குளிர்பான கம்பெனி என்று. இதையறிந்த பெப்சி நிர்வாகம் உடனடியாக சூரியூரில் உள்ள சிலருக்கு தினக்கூலியாக வேலை வழங்கப்பட்டது.
 
இருப்பினும் தொடர்ந்து கிணற்றில் தண்ணீர் வற்றியதால் 2012, டிசம்பர் மாதம் சூரியூர் விவசாய சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில் சில நண்பர்களுடன் சூரியூர் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆராய்ந்தோம். அப்போது ஆபத்தான, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அங்குள்ள நிலங்களில் நேரிடையாக கலக்கவிட்டனர். அன்றுமுதல் சூரியூரை சார்ந்த திரு. ராஜேந்திரன் பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில் இருந்து தொழிற்சாலையி ன் உரிமம் சம்மந்தமாக ஆவணங்கள் பெறப்பட்டது.
 
பெறப்பட்ட ஆவணங்களை பார்க்கும்போது திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. இந்த தொழிற்சாலை அனுமதி பெறாமலே கட்டப்பட்டிருப்பதை நகர் ஊரமைப்பு துறை மூலம் தெரியவந்தது.
அதுமட்டுமில்லாமல் போலி ஆவணங்களை சமர்ப்பித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து உரிமம் பெறப்பட்டுள்ளது.
 
இன்னும் பல ஆவணங்களை ஒன்றிணைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. அதனால் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு “ உலக தண்ணீர் தினம் – 2014 அன்று உண்ணாவிரதம் இருக்க முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சிராப்பள்ளி கோட்டாசியர் தலைமையில் நடைப்பெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், அரசு நிர்வாகம் பெப்சி தொழிற்சாலைக்கு மட்டுமே ஆதரவாக பேசியதை தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடந்தது.
 
இதனை தொடர்ந்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் பெப்சி தொழிற்சாலைக்கு உரிமம் புதுப்பித்து நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
இருப்பினும் இன்றுவரை மாவட்ட நிர்வாகம், பத்திரிக்கை, ஊடகம் என்று பல கதவுகளை தட்டிவிட்டோம். ஆனால் அதிகார பலமும், பண பலமும் பாதாளம் வரை சென்று அறவழியில் போராடும் சூரியூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கவிடவில்லை.
 
தற்போது வெளிவந்துள்ள “கத்தி” திரைப்படத்தின் மூலம் அனைத்துதரப்பட்ட மக்களுக்கும் “தண்ணீரின் அவசியமும், உரிமையும்” தெரியவந்துள்ளது. நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய ஏரிகளும், குளங்களும் நம் தலைமுறைகளின் தாகத்தை தணிக்கவேண்டுமே தவிர, அந்நிய நாட்டவர்களின் பணபசிக்கும், நம் நாட்டு துரோகிகளின் ஆடம்பர பசிக்கும் விட்டுவிடக்கூடாது.
 
சூரியூரில் பெப்சி கம்பெனிக்கு எதிராக நடைபெறும் போராட்டதுக்கு என்ன செய்யபோகிறீர்கள். தன்னால் மட்டும் என்ன செய்யமுடியும் என்று விலகிபோகிறீர்களா? அல்லது “சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்று எங்களுடன் இணையபோகிறீர்களா? மனசாட்சியுள்ளவர்கள், மானமுள்ளவர்கள் இந்த விவசாயிகளின் கண்ணீரை துடைக்க எங்களின் அறப்போராட்டத்தில் இணையவார்கள் என்று நம்புகிறோம்.
கரம் கொடுங்கள்
மாற்றி அமைப்போம்
Join With Us:
https://facebook.com/thanneer3
https://facebook.com/vinothraj.se shan
தண்ணீர் இயக்கம்
www.thanneer.org வினோத்ராஜ் சேஷன்: 9500189319 ivfvinothraj@gmail.com
இதை அனைவரும் பகிருங்கள்(Share). ஏனெனில் பத்திரிகை., ஊடகங்களை விட சமூக வலைதளங்களுக்கு சக்தியும் அதிகம். பொறுப்புகளும் அதிகம்

நன்றி:-மேற்படி செய்தி,தண்ணீர் இயக்கம் வினோத்ராஜ்சேசன்,மற்றும் வெங்கட்ராமன் முகநூலில் இருந்து எடுத்தாளப்பட்டது..

தண்ணீர் இயக்கத்தின் சூரியூர் கிராமம் மீட்பு போராட்டத்தை... எமது கொங்கு தமிழர் கட்சி ஆதரிக்கும்...
.

இவன்:-டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி

வெள்ளி, 24 அக்டோபர், 2014

விஜயின் கத்தி-விவசாயிகளின் உரிமைக்குரல்

விஜயின் கத்தி திரைப்படத்துக்கு,கொங்கு தமிழர் கட்சி ஆதரவு கொடுத்தது ஏன்,,? என்று என்னிடம் பலர் கேள்வி எழுப்பினார்கள் அதற்கான பதில்...கீழே...

விவசாயின் உரிமைக்குரலாக,உழவர்சங்களின் கோரிக்கையாக,கொங்கு தமிழகத்தின் எழுச்சிமிக்க,உணர்ச்சிக்குரலாய்.....அழிந்துவரும் வேளாண் இனத்தின் இடி முழக்கமாய்...கத்தி திரைப்படத்தில் நடிகர் விஜய் பேசிய உணர்ச்சிமிக்க வசனங்கள்...கீழே கொடுத்துள்ளேன்...படியுங்கள்...எமது ஆதரவு நிலைப்பாடு சரியானது என்று ஆதரிப்பீர்கள்

 ஒரு அமெரிக்கன் மல்டி நேஷனல் கம்பேனி 200 விவசாயக் கிராமங்கள அழிச்சிருக்கு, அதுல எதுத்து நின்ன கிராமம் “தன்னூத்து”. அதுக்காக அவங்க குடுத்த வெல 9 விவசாயிங்களோட உயிர். இந்த கொடுமைய உங்களுக்கு தெரியப்படுத்த முயற்சி பண்ணி,பண்ணி முடியல. 

3 வேல பசி எடுக்கும் போது சாப்பாடு ஞாபக வர நமக்கு அத விவசாயம் பண்ணறவங்களோட ஞாபக என்னைய்காவுது வந்துருக்க. கடந்த 30 வருசத்துல 12,456 ஏரிகள் மூடப்பட்ருக்கு, 27 ஆயிரத்துக்கும் மேல குளங்கள் அழிக்கப்பட்ருக்கு, 7 ஆறுகள் மூடபட்ருக்கு, 1,67,512 ஏக்கர் விவசாய நிலம் அழிக்கப்பட்ருக்கு. 

தாமரபரணி ஆறுலயிருந்து ஒரு கோலா கம்பேனி ஒரு நாளைக்கு 9 லட்ச லிட்டர் தண்ணி எடுக்குறாங்க. இதுல விவசாயத்துக்கு தண்ணி எங்கயிருக்கும், விவசாயி தற்கொல பண்ணிக்காம என்ன பண்ணுவா. அவங்க பசிக்கு பிச்ச கேக்கல சார், விவசாயத்துக்கு தண்ணி கேக்குறாங்க. தன்னூத்து கிராமம் மட்டுமில்ல சொந்த ஊர விட்டு ஓடி போன அத்தன விவசாயிகளுந்தா. 

20 வருசத்துக்கு முன்னால விவசாயம் பண்ணவ இன்னைக்கு சிட்டில கோயில் வாசல்ல பிச்ச எடுக்குறா, பாலத்துக்கு கீழ துணி தொவக்குறா, சாக்கட அள்றா. உங்கள்ள நெரைய பேருக்கு தெரியாத ஒரு விஷயத்த சொல்றேன், இந்தியா முழுக்க ஒவ்வொரு 30 நிமிசத்துக்கும் ஒரு விவசாயி தற்கொல பண்ணிக்கிறா, அவங்க குடும்பமே தெருவுக்கு வருது. இது கடந்த 10 வருசமா நடந்திட்டு வருது. 

அவங்களோட பரம்பரையே உங்களுக்கு சாப்பாடு போடுறதுக்காக வாழ்ந்த குடும்பம் கொஞ்ச கொஞ்சமா அழிஞ்சிட்டு வருது. 2002-லயிருந்து இதுவரைக்கும் ஒரு 10 லட்ச விவசாயிகள் இந்த தொழிலயே விட்டு வேற வேலைக்கு போய்டாங்க. 

இப்போ மீத்தேன் வாயு, அத எடுக்குறதுக்காக தஞ்சாவூர், நாகப்பட்டினம் ரெண்டு ஃடிஸ்டிக்லையும் 1,64,819 ஏக்கர் நிலப்பரப்ப ஒரு மல்டி நேஷனல் கம்பேனி அழிக்கப்போது, அந்த விவசாய குடும்போஎல்லா பசில சாகப்போது. 

5000 கோடி கடன் வாங்குன ஒரு பியர் ஃபேக்ட்ரி ஓனர் என்னால அந்த கடன கட்ட முடியலைனு கை தூக்குறா, ஆனா அவே தற்கொல பண்ணிக்கல, அவனுக்கு லோன் குடுத்த அதிகாரிங்களும் தற்கொல பண்ணிக்கல, ஆனா 5000 ரூவா கடன் வாங்குன ஒரு விவசாயி அத கட்ட முடியாம, வட்டி மேல வட்டி ஏறி, பூச்சி மருந்து குடிச்சு தற்கொல பண்ணிக்கிறா. 

இதயெல்லா கவனிக்க சிட்டில இருக்க உங்களுக்கு நேர இல்ல, இத சொல்ல தா டீ.வி சேனல்ட கேட்டோ, ஆனா டீ.வில லேகியோவிக்கவும், சமையல் செய்யவும், டான்ஸ்க்கு மார்க்கு போடவும் டைம் இருக்கு, ஒரு கிராமோ அழிய போறத சொல்ல ரெண்டு நிமிஷ இல்ல. 

இந்தியாவுக்கு ஃபேக்ட்ரியே வேணாம்ணு நாங்க சொல்ல வரல, குடிக்குற பால்லயிருந்து தயார் பண்ற சோப்பு வேணா. முட்ட, மீனு, கேரட்லயிருந்து எடுக்குற பேர்னஸ் கீரீம் வேணா. தக்காளி, ஆரஞ்சு, பாதாம்ல தயாரிக்குற அழகு சாதண பேக்ட்ரி வேணா. இந்தியால விட்டமீண் குறைபாடுனால ஒரு நாளைக்கு 5000 குழந்தைங்க இறந்து போறங்கய்யா. பணக்காரே யூஸ் பண்ற ஒரு காண்டம்ல ஃஸ்டாபேரி ஃபேலேவர் வேணும்னா, ஒரு ஏழ குழந்த தன்னோட வாழ்க்கைய்ல ஃஸ்டாபேரிய நெனச்சு பாக்க முடியுமா...
 
(சாதாரண தண்ணி, அதுல என்ன அவ்லோ பணமா கிடைக்கும்)
யோவ்.... சாதாரண தண்ணியா...
 
2ஜினா என்னய்யா..
அலைக்கட்றை.. காத்து..
வெறும் காத்தமட்டுமே வித்து கோடி கோடியா ஊழல் பண்ற ஊர்யா இது, செல்போன் ஆடம்பரம்...... தண்ணி அத்யாவட்சியம்... 

கத்தி திரைப்படத்தை எமது கொங்கு தமிழர் கட்சி தொடர்ந்து ஆதரிக்கும்.....

இவன்:-தெ.கு.தீரன்சாமி,தேசிய அமைப்பாளர்,கொங்கு தமிழர் கட்சி

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மராட்டிய மண்ணில் வீறுகொண்டு எழுந்த முதல் தமிழ் எம்.எல்.ஏ கேப்டன்.ஆர்.தமிழ்செல்வனுக்கு-கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர்.டி.கே.தீரன்சாமி வாழ்த்து

Tamil Selvanமராட்டிய கவர்னரால்.வீரத்தமிழன் என்ற விருதுபெற்று-மும்பை தமிழர்களால் கேப்டன் என அன்புடன் அழைக்கப்படும்-கேப்டன் ரா,தமிழ்ச்செல்வன் புதுக்கோட்டை மாவட்டம்,கரம்பக்குடி தாலுகா,பிலவிடுதி கிராமத்தில் ராமையா ,தங்கம் தம்பதிகளுக்கு 1958-ம் ஆண்டு மகனாகப்பிறந்தார்.

கடந்த 25-ஆண்டுகளுக்கு முன்னதாக மும்பை சென்று கூலித்தொழிளாலியாக தன்னுடைய வாழ்வைத்தொடங்கி-ஏஜன்சி ஆரம்பிது கடின உழைப்பால் உயர்ந்தவர்.

தான் சம்பாதிக்கும் பணத்தில் மும்பைத்தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவந்தார்.இதன் காரணமாக மும்பைத்தமிழர்கள் இவரை கேப்டன் என அன்புடன் அழைக்கத்தொடங்கினார்கள்.சாயன்கோலிவாடா தொகுதியின் சட்டமன்றத்தொகுதி தலைவராகவும்-168-வது வார்டு கவுன்சிலராகவும்,மும்பை மாநகராட்சி பணிக்குழு தலைவராகவும்,ப.ஜ.க மும்பை பிரதேச செயலாளராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது சாயன் கோலிவாடா சட்டமன்றத்தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.தன்னை பின்தொடர்ந்த சிவசேன வேட்பாளரைவிட 3,742 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். மேலும் இந்தத்தொகுதியில் 66 ஆயிரம் மாராட்டிய இன வாக்காளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்நிய தேசத்தில் அதுவும் சிவசேனா ஆதிக்கம் கொண்ட மராட்டிய மண்ணில் அதன் வேட்பாளரை தோற்கடித்து வீறுகொண்டு எழுந்த கேப்டன்.ரா.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ அவர்களின் பணி சிறக்க எமது கொங்கு தமிழர் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்.

எமது கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர்-டி.கே.தீரன்சாமி மும்பை.எம்.எல்.ஏ.கேப்டன்,ரா.தமிழ்ச்செல்வன் அவர்களை அலைபேசியில் தொடர்பு வாழ்த்து தெரிவித்தார்.

சனி, 18 அக்டோபர், 2014

அம்மா அவர்களின் தமிழக வருகை-கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் அறிக்கை:-

டி.கே.தீரன்சாமி,
தேசிய அமைப்பாளர்,
கொங்குதமிழர்கட்சி,
http://theeranchinnamalai.blogspot.in
http://kongutamilar.blogspot.in
9865126679

பெறுநர்:-உயர்திரு-செய்தி ஆசிரியர்&நிருபர் அவர்கள்
தமிழ்நாடு,அனைத்து செய்தி ஊடகங்கள்.

அம்மா அவர்களின் தமிழக வருகை-கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் அறிக்கை:-

ஒட்டுமொத்த உலகத்தமிழர்களின் பிராத்தனை-மக்கள் முதல்வர் அம்மா,சின்னம்மா
உள்ளிட்ட நால்வரின் விடுதலை-

அம்மா அவர்களின் தமிழகவருகை-தீபாவளி திருநாள் மூன்று நாட்கள் உள்ள
நிலையில்-தீபாவளிக்கொண்டாட்டம்-உற்சாகம் அம்மா அவர்களின் வருகையின்போது
நேற்றே தொடங்கிவிட்டது.

கொங்கு தமிழகமக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தீபாவளி திருநாளை தொடங்கிவிட்டார்கள்.;-

இவன்:-டி.கே.தீரன்சாமி
தேசிய அமைப்பாளர்,
கொங்கு தமிழர் கட்சி,
http://theeranchinnamalai.blogspot.in
http://kongutamilar.blogspot.in

புதன், 8 அக்டோபர், 2014

மக்கள் முதல்வர் அம்மா-சின்னம்மா சசிகலா விடுதலை பெற-கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி மொட்டை அடித்து வேண்டுதல்

கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர்டி.கே.தீரன்சாமி மொட்டை அடித்தபோது எடுத்த படம்






முதல்வர் அம்மா கைதிசெய்யப்பட்ட 27-ம் தேதி மாலை நான்கு மணி முதல் கரூரிலிருந்து புறப்பட்டு கொடுமுடி வழியாக ஈரோடு சென்று அங்கு அ.தி.மு.கவினர் நடத்திய கண்டன் ஊர்வலத்தில் கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமையில் கலந்து கொண்டோம்.ஜெயா தொலைக்காட்சி உள்ளிட்ட சில செய்தி ஊடங்களுக்கு எமது கண்டனத்தை பதிவு செய்தோம்.

மாலை 7-மணிக்கு கொடுமுடி மகுடேஸ்வரன் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்து அம்மா மற்றும் சின்னம்மா உள்ளிட்ட நால்வரும் விடுதலை பெற சிறப்பு அர்சனைகள் செய்து வழிபட்டோம்.

29-ம் தேதி எமது கொங்கு தமிழர் கட்சியின் தேசிய நிர்வாகிகளின் அவசரக்கூட்டத்தை கூட்டி தீர்மானங்கள் வாயிலாக கடும் கண்டனத்தை பதிவு செய்தோம்.

4-10-2014 அன்று கரூரில் நடைபெற்ற மனிதச்சங்குலிப் போராட்டத்தில் கலந்து கொண்டோம்.

05-10-2014 ஞாயிற்றுக்கிழைமை அன்று பழநி சென்று கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே,தீரன்சாமி மொட்டை அடித்து மக்கள் முதல்வர் அம்மா மற்றும் சின்னம்மா சசிகலா உள்ளிட்ட நால்வரும் விடுதலை பெற பழநி முருகனிடம் வேண்டுதல் வைக்கப்பட்டது.

அம்மா ஜெயலலிதா மற்றும் சின்னம்மா சசிகலா அவர்களுக்காக தோழமைக் கட்சியின் தலைவரான - எமது கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி ஒருவர் மட்டுமே மொட்டை அடித்து வேண்டுதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

06-10-2014அன்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் எமது காங்கயம் பகுதியில் கலந்து கொண்டோம்.

செய்தி;-பி.செளந்திரராஜன்,மாநில செய்தித்தொடர்பாளர்-


செவ்வாய், 30 செப்டம்பர், 2014

புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானது. கொங்கு தமிழர் கட்சி தீர்மானம்


செப் 30:
             காங்கயத்தில் கொங்கு தமிழர் கட்சியின் மாநில தேசிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தேசிய அமைப்பாளர் டி .கே.தீரன்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதானமாக புரட்சித் தலைவி டாக்டர் அம்மா அவர்களுக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பு மற்றும் தண்டனை பற்றி காரசாரமாக விவாதிக்கப்பட்டது.அம்மாவுக்கு எதிரான தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிரான தீர்ப்பு என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
                                 கடந்த 50 ஆண்டுகளாகவே கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் ஒரே தேசிய  குடையின் கீழ் இருந்தாலும் கன்னடர்,     தமிழர் என்ற பிரிவினையை கர்நாடகா தொடர்ந்து கையில் எடுத்து வருகின்றது.
அதற்கு  காவிரிப் பிரச்னை ,கர்நாடகா வாழ்தமிழர்கள் மீது தாக்குதல் ,அரசியல் பழிவாங்குதல் என பல உதாரணங்களை முன் வைக்கலாம்.அப்படி  இருக்கும் போது தமிழர்களுக்கு எந்த வகையிலும் கர்நாடகத்தில் நீதி கிடைக்க வாய்ப்பில்லை-என்ற நிலையிலும் நீதியை மதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் டாக்டர் .புரட்சி தலைவி அம்மா மீதான வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்பினோம்.ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கு எதிரான தீர்ப்பு.
இதுவே  ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்து. இதே கருத்தை வலியுறுத்தி கொங்கு தமிழர் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றுகிறோம்.

/அமைப்பின் சார்பில் / செய்தி வழங்குதல்
டி.எஸ்.சண்முகம்
தேசிய இளையோர் பிரிவு செயலாளர்                                                          
/அமைப்பு சார்பில் அதிகாரப்பூர்வ ஒப்புதல் /                                           உயர்திரு.டி .கே.தீரன்சாமி அவர்கள்                                                               தலைவர் மற்றும் தேசிய அமைப்பாளர் .                                                                    நாள் : 30.09.2014

சனி, 27 செப்டம்பர், 2014

திட்டமிட்ட சதியும், நீதிமன்றத் தீர்ப்பும்கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெ.கு.தீரன்சாமி கண்டனம்.


 திட்டமிட்ட சதியும்,  நீதிமன்றத் தீர்ப்பும்....திட்டமிட்ட சதியும்,  நீதிமன்றத் தீர்ப்பும் கொங்கு தமிழர் கட்சியின்  தேசிய அமைப்பாளர் தெ.கு.தீரன்சாமி  கண்டனம்.

1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ 66.64 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாண்புமிகு தமிழக முதல்வர் மீதான பொய் வழக்கில், பலதரப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு பிறகு முதல்வருக்கு எதிரான ஒரு தீர்ப்பை கர்நாடக நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு நீதிக்கு சாதகமானதாக வழங்கப்பட்டதா..?இல்லை, அநீதிக்கு ஆதரவாக அனைத்துமே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. முதல்வரின் வளர்ச்சி, தமிழகத்தின் உரிமைகளுக்கு போராடுவதை தன் கடமையாக கொண்ட அவரை இனியும் விடுவது தமிழகத்தில் தன்னலம் கொண்டவர்களுக்கும், அவரின் போராட்ட குணத்திலே  பெற்ற நியாயத்தால் தொலைந்து போன தேச துரோகிகளின் அனைத்து திட்டங்களுக்கும் தோல்வியைத் தந்ததால் பொது எதிரியாக முதல்வரை திட்டமிட்டு சிறைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

நீதியின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவரும், சத்திய வழியில் அதிமுகவை தோற்றுவித்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழித் தோன்றல் தான் நமது இதய தெய்வம் புரட்சித்தலைவி அவர்கள். அரசியல் வாழ்வில் இவர் சந்த்தித்த இன்னல்கள் ஒன்று இரண்டல்ல. புரட்சித்தலைவரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை முடக்க நினைத்தவர்களை தனது திறமையினாலும், மக்களின் அன்பு மற்றும் ஆதரவினாலும் தகர்த்தெறிந்தவர் புரட்சித்தலைவி.

மக்கள் பணிக்காகவே தன்னை அரசியலில் தியாகம் செய்த புரட்சித்தலைவி அவர்களுக்கு நேற்றைய தீர்ப்பின் மூலமாக ஒரு தடையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். 
சில மாதங்களுக்கு முன்பாக கருத்து கூறிய முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, "தன்னுடைய பதவிக் காலத்தில் பல நீதிமன்ற நியமனங்களுக்கு சில அரசியல் கட்சிகளால், குறிப்பாக தமிழகத்தில் கடந்த காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த  கட்சியின் தலையீடு இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்." இதிலிருந்தே எதிர்க்கட்சியான திமுகவின்  நீதித்துறை தலையீடுகள் புரிகிறது.

அவரது  அரசியல் பயணத்திலிருந்தே அவர் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளில் இருந்தும், வழக்குகளில் இருந்தும் தன்னை குற்றமற்றவர் என்று  நிரூபித்தவர் புரட்சித்தலைவி.
நீதித்துறையின் செயல்பாடுகளுக்கும் முழுஒத்துழைப்பை நல்கியே அவர் வென்றிருக்கிறார்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பிற்கு, முல்லை பெரியாறு, இலங்கைத்தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, கெயில் எரிவாயு குழாய் திட்டம், மீத்தேன் வாயுத் திட்டம் போன்ற வாழ்வாதர பிரச்சினைகளில் கடந்த மற்றும் தற்போதைய மத்திய அரசுகளுக்கு எந்த பாரபட்சமும் பாராமல்  நீதிக்கு போராடி நெருக்கடியைத் தந்த, தரப்போகும் தலைவர் இவர் மட்டும் தான்.

முல்லைப் பெரியாறு பிரச்சினையைப் பொறுத்தவரையில், கேரளாவில் அரசியல் ஆதாயம் இல்லை என்பதால் மத்தியில் ஆளும் கட்சி முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு செவி சாய்த்தது. ஆனால், காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசியல் ஆதாயத்தை அடையவும், தமிழகத்தில் காலூன்றவும் ஒரே தடையாக இருக்கும் சக்தியான புரட்சித்தலைவியை பழிக்கு ஆளாக்கியுள்ளனர்.

கட்ச்த்தீவு பிரச்சினையை மறைக்க, தமிழகத்தில் இனி அரசியல் செய்ய புரட்சித்தலைவி தான் அவர்களுக்கெல்லாம் பொது எதிரி. மக்கள் நீதிமன்றத்தில் மக்கள் அவருக்கு தேர்தல் மூலமாக வெற்றியை மட்டுமே வழங்கியிருக்கின்றனர்.

தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்குன் சக்தியான புரட்சித்தலைவிக்கு அரசியலில் நிரந்தர ஓய்வு கிடைத்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அனைவருக்கும் நினைவில் நிற்க வேண்டியது, இது போன்ற பல சதிகளில் இருந்து நெருப்பாற்றில் நீந்தியவர் புரட்சித்தலைவி.

செய்தியாளர்கள் பேட்டியில் சுப்ரமணிய சுவாமி, தமிழகத்தில் அதிமுக இயக்கத்தின் மூலமாக நக்சலைட்டுகள்,ஐ.எஸ்.ஐ இயக்கம், விடுதலைப்புலிகள் உள்ளிட்டவற்றை இணைத்தும் ஒரு சர்ச்சையை பேசியுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது.

மீண்டும் வருவார் தங்கத்தாரகை...தமிழகத்தின் நிகரில்லா தலைவி புரட்சித்தலைவி....!

க.சௌந்தரராஜன்.