ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மராட்டிய மண்ணில் வீறுகொண்டு எழுந்த முதல் தமிழ் எம்.எல்.ஏ கேப்டன்.ஆர்.தமிழ்செல்வனுக்கு-கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர்.டி.கே.தீரன்சாமி வாழ்த்து

Tamil Selvanமராட்டிய கவர்னரால்.வீரத்தமிழன் என்ற விருதுபெற்று-மும்பை தமிழர்களால் கேப்டன் என அன்புடன் அழைக்கப்படும்-கேப்டன் ரா,தமிழ்ச்செல்வன் புதுக்கோட்டை மாவட்டம்,கரம்பக்குடி தாலுகா,பிலவிடுதி கிராமத்தில் ராமையா ,தங்கம் தம்பதிகளுக்கு 1958-ம் ஆண்டு மகனாகப்பிறந்தார்.

கடந்த 25-ஆண்டுகளுக்கு முன்னதாக மும்பை சென்று கூலித்தொழிளாலியாக தன்னுடைய வாழ்வைத்தொடங்கி-ஏஜன்சி ஆரம்பிது கடின உழைப்பால் உயர்ந்தவர்.

தான் சம்பாதிக்கும் பணத்தில் மும்பைத்தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவந்தார்.இதன் காரணமாக மும்பைத்தமிழர்கள் இவரை கேப்டன் என அன்புடன் அழைக்கத்தொடங்கினார்கள்.சாயன்கோலிவாடா தொகுதியின் சட்டமன்றத்தொகுதி தலைவராகவும்-168-வது வார்டு கவுன்சிலராகவும்,மும்பை மாநகராட்சி பணிக்குழு தலைவராகவும்,ப.ஜ.க மும்பை பிரதேச செயலாளராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது சாயன் கோலிவாடா சட்டமன்றத்தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.தன்னை பின்தொடர்ந்த சிவசேன வேட்பாளரைவிட 3,742 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். மேலும் இந்தத்தொகுதியில் 66 ஆயிரம் மாராட்டிய இன வாக்காளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்நிய தேசத்தில் அதுவும் சிவசேனா ஆதிக்கம் கொண்ட மராட்டிய மண்ணில் அதன் வேட்பாளரை தோற்கடித்து வீறுகொண்டு எழுந்த கேப்டன்.ரா.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ அவர்களின் பணி சிறக்க எமது கொங்கு தமிழர் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்.

எமது கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர்-டி.கே.தீரன்சாமி மும்பை.எம்.எல்.ஏ.கேப்டன்,ரா.தமிழ்ச்செல்வன் அவர்களை அலைபேசியில் தொடர்பு வாழ்த்து தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: