வியாழன், 10 அக்டோபர், 2013

ஏற்காடு இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க விற்கு கொங்குதமிழர்கட்சி ஆதரவு-மாநிலத்தலைவர் தெ.கு.தீரன்சாமி-அம்மா அவர்களுக்கு கடிதம்

                                                                                                                                   தேதி:10-10-2013

பொருள்:-
         ஏற்காடு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் புரட்சித்தலைவி      அம்மா அவர்களின் தலைமையை ஆதரிப்பது தொடர்பாக...

மாண்புமிகு தமிழக முதல்வர், கழகப்பொதுச்செயலாளர் மற்றும் 2014ன் பாரதப்பிரதமர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்.

இப்பவும் எமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தமிழநாடு தீரன்சின்னமலை பாசறையின் செயற்குழு கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அதில் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் சீரிய தலைமையில் செயல்படும் தமிழக அரசின் பல்துறை சாதனைகளை பாராட்டி நன்றி தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் திசம்பர் 4ம் தேதி நடைபெறும் ஏற்காடு சட்டமன்றப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையிலான வேட்பாளரை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதென எமது கொங்கு தமிழர் கட்சியின் சார்பில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

எமது ஆதரவு நிலைபாட்டை தங்களிடம் நேரில் தெரிவிக்க நாள்-நேரம் ஒதுக்கி ஆவண செய்திட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு:-
               கடந்த 2001 முதல் நடைபெற்ற 5பொதுத்தேர்தல்கள்,உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் அம்மா அவர்களின் தலைமையை ஆதரித்து கடந்த 13 வருடங்களாக தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

கடந்த 07-04-2013 அன்று அம்மா அவர்களை நேரில் சந்தித்து 2011 சட்டமன்றப் பேரவைத் தேர்தல் ஆதரவினை தெரிவித்தோம்.தொடர்ந்து கொங்கு தமிழகத்தின் 32 சட்டமன்றப் பேரவை தொகுதிகளில் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டோம் என்பதை தங்களின் மேலான கவனதிற்கு கொண்டு வருகிறேன்.                                
        
                                                                                                                        இப்படிக்கு
                                                                                                              தெ.கு.தீரன்சாமி,
                                                                                                         மாநிலத்தலைவர்

கருத்துகள் இல்லை: