வியாழன், 8 மே, 2014

முல்லைப்பெரியறு அணைப்பிரச்சனையில் முதல் போராளி தமிழக முதல்வர் அம்மா! கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் தெ.கு,தீரன்சாமி புகழாரம்!


08/05/2014  கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர்
தெ.கு,தீரன்சாமியின் ஊடகச்செய்தி அறிக்ககை

கேரள மாநிலம் இடுக்கியில் 120 ஆண்டுகளுக்கு முன்பு பென்னிக்குயிக் என்ற
ஆங்கிலேயரின் சீரிய முயற்சியால் முல்லைப் பெரியாறு அணை
கட்டப்பட்டது.திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும்-சென்னை மகாண அரசுக்கும்
இடையே 999 ஆண்டுகாலத்துக்கு-152 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி
பயன்படுத்தி கொள்ளலாம்.என ஒப்பந்தம் போடப்பட்டது.

அணையில் விரிசல் ஏற்படுவதாக சொல்லி கேரள அரசு நீர் மட்டத்தை 136 அடியாக
குறைத்தது.இதை எதிர்த்து அம்மா அவர்களின் தலைமையிலான தமிழக அரசு உச்ச
நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது.

அம்மா அவர்களின் கடுமையான சட்டப்போராட்டத்துக்கு பிறகு 2006-பிப்ரவரியில்
136-அடி என்பதை மாற்றி மீண்டும் 142-அடியாக உயர்த்திக்கொள்ளலாம்.என
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அந்தத்தீர்ப்பை
நீர்த்துப்போகச்செய்யும் வகையில் கேரள அரசு சட்டம் இயற்றியது.

அப்பொழுதும் தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்ட வேண்டுமென அம்மா அவர்களின்
தலைமையிலான அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது
உச்ச நீதிமன்றம் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்தன் தலைமையிலான 5-நபர்கள் குழுவை அமைத்தது.

பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு அந்தக்குழு முல்லைப்பெரியாறு அணை
பாதுகாப்பாக உள்ளதாக 2012-ஏப்ரல்-25-ல் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை
தாக்கல் செய்தது.பல்வேறு சட்டப்போராட்டங்களை சந்தித்த இந்த
வழக்கில்"முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142-அடியாக
உயர்த்திக்கொள்ளாலம்" என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நேற்று
உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதற்கு முதல் போராளியாக தன்னை அர்பணித்துக்கொண்டவர் நம்முடைய தமிழக
முதல்வர் டாக்டர்.புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.தமிழகத்தின் காவல்
தெய்வமாக,தமிழர்களை காக்கும் ஆதிபராசக்தியாக அம்மா அவர்கள் சக்தியின்
வடிவமாக அவதாரம் எடுத்துள்ளார்கள்.இதற்கு எமது கொங்கு தமிழர்
கட்சி,தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவை மற்றும் கொங்கு தமிழகத்தின்
சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை இந்த நேரத்தில் பதிவு செய்கிறோம்.

இவன்
தெ.கு.தீரன்சாமி
தேசிய அமைப்பாளர்

கருத்துகள் இல்லை: