ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

மதுரை ஆதீனம்,கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி பொள்ளாட்சியில் வாக்குச்சேகரிப்பு

11-04-214-பொள்ளாட்சி மக்களவைத்தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் மகேந்திரன் அவர்களை ஆதரித்து-வாக்குச்சேகரிக்கும் பொதுக்கூட்டம் பொள்ளாட்சி நகர திருவள்ளுவர் திடலில் நடைபெற்றதது.

அ.இ.அ.தி.மு.க தேர்தல் பிரிவு செயலாளர்,மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாண்புமிகு துணை சபாநாயகர்-பொள்ளாட்சி.வி.ஜெயராமன்,தமிழ்நாடு கேபிள் டி.வி சேர்மன்.உடுமலை.ராதகிருசணன்,பொள்ளாட்சி சட்டமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பணசாமி, கழக நகரச்செயலாளர் கிரி,மயில்சாமி,நகர்மன்றத்தலைவர்,துணை சாபநாயகரின் உதவியாளர் வீராசமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் குருமகா சந்நிதானம்-மதுரை ஆதீனம் அவர்கள் சிறப்புரை ஆற்றி வாக்குச்சேகரித்தார்கள்.

மேலும் நமது கொங்கு தமிழர் கட்சி மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவையின் நிறுவனர் மற்றும் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி மற்றும் கொங்கு தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.








கொங்கு தமிழர் கட்சியின் கோவை மாவட்ட அமைப்பாளரும்,பொள்ளாட்சி மக்களவைத்தொகுதி பொருப்பாளருமான கே.ஏ.பாலசுப்பிரமணி,தலைமை நிலையச்செயலாளரும்,திருப்பூர் மாவட்ட அமைப்பாருமான டி.எஸ்.சண்முகம்,ஈரோடு மாநகர,மாவட்ட அமைப்பாளர் ஈ.எஸ்.செல்வக்குமார்,கரூர் மாவட்ட அமைப்பாளர் பி.சி.சண்முகம் மற்றும் தீரன்சின்னமலை தொழிற்சங்கப்பேரவையின் பொதுச்செயலாளர் கே.எஸ்.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: