வியாழன், 6 அக்டோபர், 2011

உள்ளாட்சியில் அ.இ.அ.தி.மு.க ஆதரவு தொடரும்!மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி அறிக்கை!

உள்ளாட்சியில் அ.இ.அ.தி.மு.க ஆதரவு தொடரும் கொங்குதமிழர்கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி அறிக்கை:- எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி,நகராட்சி தலைவர்கள் மற்றும் மாநகராட்சி மேயர் பதவிகளை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை மீண்டும் அமுல்படுத்திய தமிழக முதல்வருக்கு எமது கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

 கடந்த 14-9-11 தேதியில் எமது கட்சியின் செயற்குழு கூடியது.அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் எமது செயல்பாடு அமையும்.அந்த அடிப்படையில் தேர்தலில் தொடர்ந்து போட்டியிடுவது இல்லை என்ற நிலைப்பாடு தொடரும். 2001 முதல் 2010 வரை நடைபெற்ற நான்கு பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் அம்மா அவர்களின் தலைமையை தொடர்ந்து ஆதரித்து வருகிறோம்.நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையை ஆதரித்து கொங்கு தமிழகத்தின் 32 சட்டமன்றத்தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

கடந்த 7-4-11 அன்று கோவை மாவட்டம் காளப்பட்டியில் அம்மா அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம். அந்த நேரத்தில் நூற்றுக்கு-நூறு வெற்றி பெருவோம் என்ற வெற்றுக் கோசத்துடன் தி.மு.க-காங்கிரசு,பா.ம.க வின் பொருந்தாக் கூட்டணியில்-கொங்கு மக்களின் மனநிலைக்கு மாறாக கூட்டணி கண்ட கொ.மு.க தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது.

 அ.இ.அ.தி.மு.க தலைமை புரட்சித்தலைவர் காலம்தொட்டு இன்றைய அம்மா காலம்வரை கட்சியிலும்,ஆட்சியிலும் கொங்கு தமிழகதிற்கு தொடர்ந்து உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். நடந்த முடிந்த சட்டமன்றத்தேர்தலில் கொங்கு தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி நூறுசதம் வெற்றி பெற்றது.அதற்கு பரிசாக தமிழக அமைச்சரவையில் எட்டு அமைச்சர்களை வழங்கி கொளரவித்தார்கள்.

 தேர்தல் பிரசாரத்தில் கூறியது போல-நில அபகரிப்பு பிரிவை உருவாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திடும் வகையில் செயல்படுவது,மாணாக்கர்களின் கல்வி அறிவை மேலும் செலுமைப்படுத்தும் வகையில் மடிகணினிகள் வழங்குவது,கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு,மாடு வழங்குவது,பெண்களின் சிரமத்தை போக்கும் வகையில் மின்விசிறி,மிக்சி,கிரைண்டர் வழங்குதல் உள்ளிட்ட இலவசத்திட்டங்கள் விரைவாக தொடங்கப்பட்டுள்ளது.

 திருப்பூர் சாயத்தண்ணீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் ஆட்சிப்பொருப்பில் அமர்ந்த மூன்றாவது தினத்தில் குழு அமைத்து செயல்பட்டது.மேலும் சுத்திகரிப்பு பணிகள் முழுவீச்சில் தொடங்குவதற்கு ரூ 200 கோடி வட்டியில்லாக் கடன் வழங்க ஆவண செய்து இருப்பது. ஈழத்தமிழர்களின் துயர்போக்கும் வகையிலும்,

ராசீவ் கொலைவழக்கின் குற்றவாளிகள் என்று சொல்லப்படும் மூவரின் உயிர்காக்க சட்டசபையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றியது. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து,நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி,பிரதமருக்கு கடிதம் எழுதி-அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவிற்கு ஆதரவு செய்தது. முதியோர் உதவித்தொகை,கற்பிணி பெண்கள் மற்றும் திருமண உதவித்தொகைகளை இரு மடங்காக உயர்த்தி இருப்பது.

மீண்டும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தை கொண்டு வந்தது. கடந்த தி.மு.க ஆட்சியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் விரையம் செய்து கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு,பலதுறை மருத்துவகல்லூரி,மருத்துவமணையாக மாற்றி அறிவித்து இருப்பது. 

மேற்கண்ட சாதனைகளை தாம் ஆட்சிப்பொருப்பில் அமர்ந்த குறுகிய காலத்தில் அதிவிரைவாக செயல்படுத்தி வரும் தமிழகமுதல்வர்,அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில்,எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாமல் அம்மா அவர்களின் தலைமையை ஆதரித்து கொங்குதமிழகத்தின் 12-மாவட்டங்களிலும்,சென்னை மாநகராட்சியிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவது என எமது கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறையின் சார்பில் முடிவு செய்துள்ளோம். 

இவன்:-
டி.கே.தீரன்சாமி
 மாநில அமைப்பாளர்

கருத்துகள் இல்லை: