திங்கள், 22 ஆகஸ்ட், 2011

1-மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கல்விகடனுக்கு லோன்மேலா நடத்த வேண்டும்! முதல்வருக்கு கொங்குதமிழர்கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி கோரிக்கை!2- புதிய தலைமைச்செயலகத்தை மருத்துவமனையாக அறிவித்திருப்பதற்கு முதல்வருக்கு நன்றி!

                                       முதல்வருக்கு கடிதம்:- 5 (20-8-2011)

டி.கே.தீரன்சாமி
(மாநில அமைப்பாளர்)

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்
தலைமைசெயலகம்,சென்னை

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு வணக்கம்!

பட்டப்படிப்புகளுக்கு கல்விக்கடன் வந்த பிறகுதான் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்லூரியின் கதவுகள்
திறந்துள்ளன.கலவிக்கடன் வழங்குவதில் வங்கிகள் தற்பொழுது முரண்டு பிடிக்கத் தொடங்கி விட்டது.

 2007ல் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த உதயச்சந்திரன் கல்விக்கடன் லோன் மேலா என்ற பெயரில் மாவட்டத்தின் அனைத்து வங்கி மேலாளர்களையும்
தமது ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வரவழைத்து-மாணவர்களிடம் நேரடியாக விண்ணப்பம் பெற்று அப்பொழுதே பரிசீலிக்கப்பட்டு கல்விக்கடன் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியிலும் நாமக்கல்,பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் கடந்த சில தினங்களில் கல்விக்கடன்
லோன் மேலா நடைபெற்றது.மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களும் இதை பின்பற்ற வேண்டும்.

 இதனால் பயனடையும் பெற்றோர் மற்றும் மாணவர்களின் காலம்,அவமானம்,அலைகழிப்பு,மிச்சமாகும்.

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கல்விக்கடனுக்கு   லோன்மேலா நடத்த அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் உத்தரவு இடவேண்டும்! மேலும்  இதுவரை கொடுத்துள்ள கல்விக்கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசை வழியுறுத்திஆவண செய்யவேண்டுமாய் எமது கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறையின் சார்பில்பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.


குறிப்பு:-
எமது கொங்குதமிழர்பேரவை 2001 முதல் கடந்த 10-ஆண்டுகளில் நடைபெற்ற 4-பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் அம்மா அவர்களின் தலைமையை தொடர்ந்து ஆதரித்து வருகிறோம்.

நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் எமது பேரவையை கொங்குதமிழர்கட்சியாக தொடங்கி அம்மா அவர்களின் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கொங்குதமிழகத்தின் 32-சட்டமன்றத்தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

கடந்த 7-4-11 அன்று அம்மா அவர்களை கோவை மாவட்டம் காளப்பட்டியில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம்.

எனவே,எமது பிரச்சார செய்திகளின் தொகுப்பை நேரில் வழங்கி ஆசிபெற்றிட விரும்புகிறோம்!அதுசமயம் அம்மா அவர்களை நேரில் சந்திக்க நாள்-நேரம் ஒதுக்கி ஆவணசெய்திட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

இவன்:-டி.கே.தீரன்சாமி,
மாநில அமைப்பாளர்,
கொங்குதமிழர்கட்சி மற்றும்
தமிழ்நாடு தீரன்சின்னமலை பாசறை
                                          முதல்வருக்கு கடிதம்:-4 (20-8-11)
டி.கே.தீரன்சாமி(மாநில அமைப்பாளர்)

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்
தலைமைசெயலகம்,சென்னை.


மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு வணக்கம்! எமது கொங்குதமிழர்பேரவை 2001-முதல் 
கடந்த 10-ஆண்டுகளில் நடைபெற்ற 4-பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் அம்மா அவர்களின் தலைமையை தொடர்ந்து ஆதரித்து வருகிறோம்.

நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கொங்குதமிழகத்தின் 32-சட்டமன்றத்தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

கடந்த 7-4-11 அன்று அம்மா அவர்களை கோவை மாவட்டம் காளப்பட்டியில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம்.எனவே,எமது பிரச்சார செய்திகளின் தொகுப்பை நேரில் வழங்கி ஆசிபெற்றிட விரும்புகிறோம்.
  
சுமார் 1000 கோடிரூபாய் விரயத்தில்புதிதாக கட்டப்பட்ட தலைமைசெயலகத்தில் மருத்துவக்கல்லூரியும்,
அனைத்து வசதிகளும் அடங்கிய தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு இணையான தரத்தில் சூப்பர் 
ஸ்பெசாலிட்டி மருத்துவமனை ஒன்று அமைப்பதாக நேற்றைய தினம் சட்டப்பேரவையில் தாங்கள் 
அறிவித்து இருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வறியவர்களின் கல்விக்கும்,உயரிய மருத்துவ வசதிக்கும் ஆவண செய்திருப்பது காலச்சுவடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது.
அம்மா அவர்களின் மக்கள் பணி தொடர வாழ்த்துகிறோம்! 

இவன்:டி.கே.தீரன்சாமி, 
மாநில அமைப்பாளர்,
கொங்குதமிழர்கட்சி,மற்றும் 
தமிழ்நாடு தீரன்சின்னமலைபாசறை
20-8-2011







கருத்துகள் இல்லை: