வெள்ளி, 28 ஜனவரி, 2011

கொங்குநாட்டுக்கண்ணகி வெள்ளையம்மாள்காவியம்


பாகம் - 11

மதுரை பாண்டியமா மன்னனின் நீதி தவறிய தீர்ப்பால் கற்புக்கரசி கண்ணகியின் கணவன் தண்டிக்கப்பட்டார்.பொங்கி எழுந்த கண்ணகி தன் கணவன் குற்றமற்றவன் என பாண்டிய மன்னன் அவையில் நிருபித்தாள்.கற்புநெறி தவறாத கண்ணகியின் சாபத்தால் மதுரைமாநகரம் தீப்பற்றி எரிந்தது.    

கற்புநெறி என்பது தமிழர் நாகரிகம் தோன்றிய காலம் தொட்டு தமிழனின் பண்பாட்டு அடையாளாகமாக, ஒழுக்கத்தின் குறியீடாக தொடர்ந்துவருகிறது.சக்தியின் வடிவமான கண்ணகியைப்போன்று கொங்குச்சீமையில் உதித்து! கற்புநெறியைக்காத்து! இன்றும் நம்மோடு காக்கும் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வெள்ளையம்மாள்கவியம் தான் நாம் காணப்போகும் வரலாறு.

இயற்கை வளம் கொழிக்கும் கொங்குநாடு தமிழகத்தின் இதயப்பகுதியாக அமைந்துள்ளது.இது 24 உட்பிரிவுகளை உள்ளடக்கியது. இதில் முதலாவதுநாடு பூந்துறைநாடு. இது கல்வெட்டுக்களில் பழம்பூந்துறைநாடு என சிறப்பிக்கப்படுகிறது.

காவேரிக்கு கிழக்கே கீழ்கரைபூந்துறைநாடு எனவும் மேற்கே மேல்கரைபூந்துறைநாடு என இரண்டு பிரிவுகளாக காணமுடிகிறது.கீழ்கரைநாட்டில் 32-பழம்பெறும் ஊர்களில் 12-வது ஊராக திகழும் தற்போதைய திருச்சங்கோடுவட்டம்,கருமாபுரம். இயற்கை வளத்தால் செழுமை பெற்று ஆதிகருமாபுரம், நிழலுற்றகருமாபுரம்,திருமருவுகருமாபுரம் என ஊர்தொகைபாடல்கள்,காணிப்பாடல்கள் போற்றுகின்றன.

கருமாபுரத்தில் கொங்குவேளாளரில்-பயிரன் குலத்தினர் முதல்காணிபெற்று சிறப்புடன் வாழ்ந்து வந்தனர்.அவர்களில் முதல்வன் கொங்குவேளாள காங்கயமன்றாடியார் என கருமாபுரம் செப்பேடுகூறுகிறது.

பொருள்தந்தகுலத்தின் ஆதியூரானகருமாபுரத்தில் கங்கேயன் குடும்பத்தினர்கள் சீரும்சிறப்புடன் வாழ்ந்து வந்தனர்.ப்சுமை வளம் பொருந்திய கருமாபுரத்தில் பல ஆண்டுகள் மழை பெய்யவில்லை. குளம்,குட்டைகள் வற்றி-மரங்கள் கூடபட்டுவிட்டன. உணவுப்பஞ்சமும் தலைவிரித்தாடியது.கால்நடைகள் மேய்ச்சல் இல்லாமல் மடிந்தன.காங்கயன் மனம் மருங்கினான். கால்நடைகளை காக்க அண்டைநாடு செல்ல திட்டமிட்டான்.

காவேரிக்கு மேற்கே மேல்கரைபூந்துரைநாட்டில் பூமி செழித்து கால் நடைகள் மேய்வதற்கு மேய்ச்சல் நிலம் இருப்பதை பார்த்து மகிழ்ந்தான்.மேய்ச்சல் வனத்தில் தம் தேசத்தின் கால்நடைகளையும், உற்றார்-உறவினர்களையும் அழைத்து வந்து தங்குவதற்கு அந்த நாட்டு ம்ன்னன், சேடகுலத்தலைவன்-நட்டூராரிடம் அனுமதி வேண்டினான்.நட்டூராரும் மகிழ்வுடன் அனுமதி அளித்தார்.காங்கயன் கருமாபுரம் சென்று தம் உறவினர்களையும்,கால்நடைகளையும் அழைத்துவந்து நட்டூர் வனத்தில் மேய்த்து சிறப்புடன் வாழ்ந்து வந்தான்.

நட்டூரானுக்கு நான்கு மகன்களும்,வெள்ளையம்மாள் என்ற மகளும் இருந்தனர்.வெள்ளையம்மாள்- வெள்ளை நிறப்பெண்ணாக இருந்த காரணத்தாள் பெண் பார்க்க வந்தவர்கள் எல்லாம் பிடிக்கவில்லை எனக்கூறிச்சென்றனர்.வயது பல கடந்தும் திருமணம் நடத்தும் வழி தெரியாமல் நட்டூரான் மனம் புழுங்கினான்.இளைய மகள் வெள்ளையம்மாளுக்கு மனம் முடித்த பிறகு மூத்த மகன்கள் நால்வருக்கும் மணம் முடிக்க நட்டூரான் முடிவு செய்திருந்தான்.இந்த நிலையில் ஊராரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் நட்டூராரின் குடும்பம் ஆளானது.


இந்த நிலையில் நட்டூரார் அங்கு கால்நடைகள் மேய்த்துவரும் காங்கயனை அழைத்து தம் மகளை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என வினவினார்.தன் பெற்றோர்கள் விரும்பினால் எனக்குச்சம்மதமே என காங்கயன் கூறினான்.

(தொடரும்...)

வியாழன், 27 ஜனவரி, 2011

சேலை உருவிய தீச்சட்டிக்கோவிந்தன்-நிர்வாணத்தில் பெண் போராளிகள்

  மதுரையில் காவல்துறை உயர் அதிகாரியாக இருந்தவர் விஸ்வநாத அய்யர்.கடுமையின் வடிவமான அய்யருக்கு "தீச்சட்டிக் கோவிந்தன்"என்ற பெயரும் உண்டு.மதுரையின் வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள மயானத்தைச் சுற்றிலும் சீட்டாடும் குழுக்கள் காவல்துறைக்கு பெறும் சவாலாக இருந்தது.விஸ்வநாத அய்யர் சீட்டாடுபவர்களை பிடிக்க காவலர்களைக் கொண்டு சவ ஊர்வலம் ஏற்பாடு செய்து- சவத்தின் முன் இவரே தீச்சட்டி ஏந்திச் செல்வார்.

 சூதாட்டக் குழுக்கள் இது சுடுகாட்டுக்குச் செல்லும் பிண ஊர்வலம் என்ற நினைப்பில் சீட்டாட்டத்தில் கலைகட்டிக் கொண்டிருப்பார்கள்.இந்த நேரத்தில் தீச்சட்டியின் சவப்படை சூதாட்டக் குழுக்களை சுற்றி வளைத்துக் கைது செய்து லாடம் கட்டி கொண்டு போய்விடும்.அதனால் அய்யருக்கு மதுரை வட்டாரத்தில் "தீச்சட்டிக்கோவிந்தன்"என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது.

 அதிரடியின் மொத்த வடிவமான அய்யர் மன்னிக்கவும் "தீச்சட்டிக் கோவிந்தன்"நாள் தோரும் மீனாட்சிஅம்மன் கோவிலின் தெற்கு வாசல் வழியாக சாமி கும்பிடச் செல்வது வழக்கம்.அப்படி ஒரு நாள் செல்லும் போது மறைந்திருந்த கூட்டம் ஒன்று அய்யர்மீது ஆசிட்பல்புகளை வீசி எறிந்தது.மயிரிலையில் உயிர் தப்பினார்.

 காவல் விசாரணையில் 15ந்து நபர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.6 நபர்களுக்கு பல வருட சிறை தண்டனை கிடைத்தது.காவல் உயர் அதிகாரியின் மீது ஆசிட் பல்புகளை வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தியதன் காரணம் என்ன?  

 1942 ல் வெள்ளையர்களுக்கு எதிராக "ஆகஸ்ட்புரட்சி" பெறும் போராட்டமாக உருவெடுத்தது. இது இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றில் வெள்ளை சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை ஆட்டிப்பார்த்தது.இந்தியாவின் இரண்டு நகரங்களில் மட்டுமே ஆகஸ்ட்புரட்சி போராட்டங்கள் இடைவிடாது நடைபெற்றன.ஒன்று பம்பாய்,மற்றொன்று தென்னகத்தின் தூங்காநகரமான மதுரை.

 அத்தகைய போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை விளக்குத்தூண் பகுதியில் போராளிக் குழுக்கள் "வெள்ளையனே வெளியேறு"என முழங்கிக்  கொண்டிருந்தது.மதுரை காவல்துறை அதிகாரியான "தீச்சட்டிக்கோவிந்தன்"என்கிற விஸ்வநாதாஅய்யர் தலைமையிலான காவலர்கள் முழக்கமிட்ட போராளிகளை கைதுசெய்து காவல் நிலையத்துக்கு இழுத்துச் செல்கிறது.

 அதில் சொர்ணம்மாள்,லட்சுமிபாய் என்ற இரு பெண் போராளிகளை காவலர்கள் மாற்றி,மாற்றி அடித்தனர்.கால்களால் மிதித்தனர்.பின்னர் அவர்களை ஊருக்கு வெளியே இழுத்துச்சென்று நடு வழியில் நிறுத்தி அவர்கள் உடம்பிலிருந்த சேலையை உருவி,ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வாணமாக்கினர்.

 "இப்படியே நிர்வாணமாக நடந்து போனால் சுயராஜ்ஜியம் வரும்" என்று விரட்டியடித்தனர்.இரவு முழுவதும் புதரில் மறைந்து இருந்து காலையில் அந்த வழியே சென்றவர்களிடம் நடந்ததைக் கூறி புடவை பெற்று மதுரைக்குத் திரும்பினர்.மேலும் உசிலம்பட்டியில் பெருமாள் தேவர்,அவரது தாய் பேச்சியம்மாளையும் நிர்வாணமாக்கி வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்றது துச்சாதனன்-தீச்சட்டியின் காவல்படை.

 இதற்கு பழி தீர்க்கும் வகையில் சேலை உருவிய தீச்சட்டிக் கோவிந்தனை தீர்த்துக்கட்ட அவன் மீது ஆசிட்பல்புகளை வீசியது போராளிக் குழுக்கள்.

            தயவுசெய்து கருத்துக்களை விட்டுச்செல்லவும்
தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,
செய்தி ஊடகப்பதிவுக்காக-  டி.கே.தீரன்சாமி

புதன், 26 ஜனவரி, 2011

விஜயின்-காவலன் சந்தித்த சோதனைகள்


 கமலின் மன்மதன் அம்பு வெளியான நேரத்தில்-இளைய தளபதி விஜயின் காவலன் திரைப்படம் வெளியிடப்பட இருந்துதது.கடந்த காலங்களில் விஜயின் படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வந்தது.அடுத்த படத்தை சூப்பர்கிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற நிலைமை விஜய்க்கு ஏற்பட்டது.

 பிரண்ட்ஸ் படத்தை சூப்பர்கிட் படமாக கொடுத்தவர் இயக்குனர் சித்திக்.விஜய்-சித்திக் கூட்டணி மலையாலத்தில் வசூல் மழை பொழிந்த படத்தின் ரீமேக் கதையை கையில் எடுத்தது.காவலன் என்ற பெயரில் காமெடிக் கலக்களுடன் விஜய்க்கு தேவையான மசாலாவை கலந்து காவலன் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டது.

 சத்தியராஜ்யை வைத்து தொடர்ந்து படம் எடுத்து கையைச்சுட்டுக்கொண்ட சக்திசிதம்பரத்தின் அலுவலகமும்-காவலன் திரைப்படத்தின் அலுவலகமும் ஒரே கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.இதனால் காவலன் திரைப்படத் தயாரிப்பாளர் ரோமேஸ்க்கும் சக்திசிதம்பரத்திற்கும் நல்ல நட்பு ஏற்படுகிறது.

 அதன் விளைவு காவலன் திரைப்பட வெளியீட்டு உரிமையை 42 கோடி ரூபாய்க்கு வாங்குகிறார் சக்திசிதம்பரம். இந்தபடம் வெளியானால் தனது கடன் பிரச்சனைகள் தீரும் என முடிவு செய்து தனது தகுதிக்கு மேல் கடன் பெறுகிறார்.

 கடந்த மாதமே வெளியிட தேதியும் குறிக்கப்பட்டது.சக்திசிதம்பரத்திற்கு முன்பே காவலன் படத்தை வாங்க கையில் பணத்துடன் நிறைய சம்பவான்கள் காத்திருந்தனர்.விஜயின் முந்தைய படங்கள் சறுக்கியதின் காரணமாக 40 கோடிக்கும் குறைவாக பேரம் பேசினார்கள்.ஆனால் சக்திசிதம்பரத்தின் விலை 42 கோடி ரூபாய்.

 மற்றவர்களைவிட கூடுதலாக விலை பேசியதன் காரணமாக சக்திசிதம்பரத்தின் கைக்கு வெளியீட்டு உரிமை சென்றது.ஆனால் விஜய் தரப்பு சொல்லும் காரணம் சிதம்பரத்தை நிதிநெறுக்கடியில் இருந்து மீண்டுவர உதவியாக இருக்கும் என அவருக்கு வெளியீட்டு உரிமை தரப்பட்டதாக சொல்லப்படுகிறது.காவலனின் முதல் பிரச்சனை சக்திசிதம்பரம்.

 இந்த நேரத்தில் எந்திரன் படம் 40 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.சில இடங்களில் எந்திரன் படத்தை எடுத்து விட்டு காவலன் படத்தை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் வேகம் காட்டினார்கள்.

 இதே நேரத்தில்உதயநிதி தயாரித்து கமல் நடித்த மன்மதன் அம்பு படம் வெளியானது.தொடர்ந்து காவலனும் வெளியாக இருந்தது.காவலன் வெளியானல் மன்மதன் அம்பு சொம்பு ஆகிவிடும்-மேலும் தங்களின் சொல்பேச்சு கேட்காத விஜய்க்கு தகுந்த பாடம் புகட்ட இதுதான் சரியான தருணம் என்று முடிவு செய்தனர் கலைஞர் குடும்பத்தின் திரை உலக வாரிசுகள்.

 அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர்.திரையரங்கு உரிமையாளர்களுக்கு உத்தரவுகள் பறந்தன.திரையரங்குகள் கிடைக்காத நிலையில் காவலன் வெளியீடு தைப் பொங்களுக்குத் தள்ளிப்போனது.

 விநியோகஸ்தர்களிடமும்,மீட்டர் வட்டி கும்பலிடமும் பணம் வாங்கிய சக்திசிதம்பரத்திற்கு நெறுக்கடிகள் முற்றியது.பணம் கொடுத்த சிலர் சிதம்பரத்தை வளைத்துத் தாக்கவும் செய்தார்கள்.சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.                
   
 காவலன்தைப்பொங்களுக்குஅவதரிப்பான்எனக்காத்திருந்தரசிகர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும்,திரையரங்கு உரிமையாளர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.அந்த நேரத்தில் கலைஞரின் இளைஞன்,மாறனின் ஆடுகளம் வெளியானது.

 கார்த்தியின் சிறுத்தையும்,விஜயின் காவலனும் கலைஞரின் குடும்பப்படங்களை அப்பர் பிளாப் செய்து விடும் என கலைஞரிடமே சொல்லப்பட்டது.அப்புறம் என்ன கடுமையான அஸ்திரங்கள் காவலன் மீது வீசப்பட்டது.

 சிறுத்தையின் தயாரிப்பாளர் ஞானவேல்ராசன் படத்தின் வெளியீட்டு உரிமையை தன் சொந்தப்பொறுப்பில் வைத்துக்கொண்டார்.அதனால் முன் கூட்டியே திரையரங்குகளை பதிவு செய்து கொண்டார்.

  இருப்பினும் நாடார் கட்சியின் தலைவர் ராக்கெட்ராசாவுக்கு சிறுத்தை படம் வெளியானால் அவமானம் என்று கூறி நடிகர் கார்த்தியின் வீட்டு முன்பு நாடார் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதன் பின்னனியில் இளைமை படத்தின் தயாரிப்பாளர் செயல்பட்டதாக சொல்லப்படுகிறது.அதையும் மீறி சிறுத்தை படம் பொங்களில் சீறியது.

 ஆனால் சக்திசிதம்பரத்தின் பொருளாதார நெருக்கடி விஜயின் எதிர் முகாமில் இருந்தவர்களுக்கு சாதமாக அமைந்தது.தங்கள் அரசியல் பின் புலத்தை சரியாகப் பயன்படுத்தி காவலனுக்குத் தாங்க முடியாத சோதனைகளை ஏற்படுத்தினார்கள்.
 இது போன்ற சோதனைகள் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் அ.தி.மு.க பொதுச்செயலாளரை சந்தித்து காவலன் வெளியீட்டுக்கு ஆதரவு பெற்றார்.

 இறுதியில் இளையதளபதியும்,அவரது தந்தையும் இணைந்து அதிரடியாக களம் இறங்கி நீதிக்கு தண்டனை கொடுத்தவர்களைத் தண்டித்து,சட்டம் ஒரு இருட்டறை என்பதை நிருபித்து,பல கோடி ரூபாய்களை இழந்து காவலன் படத்தை பிரசவித்தார்கள்.

 காவலன் காற்று வாங்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி! விளம்பரம் எதுவும் இல்லாமல் காவலன் இளைய தளபதியை காப்பாற்றியது. 



        பார்த்துவிட்டு கருத்தைக் கொஞ்சம் பதிவு செய்யுங்கள்

தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவுக்காக-     டி.கே.தீரன்சாமி.

"முந்த்ரா"இந்தியாவை உலுக்கிய முதல்ஊழல்!


உலக அரங்கில் ஊழலின் தேசமாக நிமிர்ந்து நிற்கும் சுதந்திர இந்தியாவின் 62வது குடியரசு தின நிகழ்சிகள் நாடுமுழுவதும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.1958"முந்த்ரா"உழல்.நமதுதேசத்தின்பிரதமர்நேருஜிஅவர்களையும்,தேசியத்தையும்உலுக்கியமிகப்பெரியஊழல்.

 இன்று கொடிகட்டிப் பறக்கும் 2ஜி ஸ்பெக்ரம் ஊழலுக்கு அச்சாரம் இட்ட "முந்த்ரா"ஊழலின் கதநாயகன்அப்போதைய மத்திய நிதி அமைச்சரும்,காங்கிரஸ் கட்சியை சார்ந்தவரும்,பிரதமர் நேருஜி,கர்மவீரர் காமராசர் போன்றவர்களின் நெருங்கிய நண்பரும் தமிழகத்தை சார்ந்தவருமான டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியார்.
 
 கரிதாஸ் முந்த்ரா சாதாராண மனிதராக தமது வாழ்வை தொடங்கியவர். இந்தியாவில் நடைபெற்று வரும் ஊழலின் தொடக்க ஆட்டக்காரர்.அலட்டிக்கொள்ளாமல் அதிரடியாக சிக்சர்,பவுன்ட்ரிகளை அடித்தவர்.

 இந்திய ஆயிள் காப்பீட்டுக் கழகம்(எல்.ஐ.சி) முந்த்ராவுக்கு சொந்தமான 6 நிருவனங்களில் 1.24 கோடி ரூபாய்களை முதலீடு செய்கிறது.அரசின் வழிகாட்டுதல் எதுவும் இல்லாமல் நிதிஅமைச்சர் டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியாரின் நெறுக்குதல் காரணமாக முந்த்ராவின் கம்பெனிகளில் செய்யப்பட்ட முதலீடுகள் எல்.ஐ.சிக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன.
 அன்றைய காலத்தில் இந்த இழப்பின் மதிப்பு 50 கோடி ரூபாய்.உழல் செய்தவர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்,நேருஜீயின் நெருங்கிய நண்பர்.ஆனால் கரைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர், நேர்மையின் வடிவமான பிரதமர் நேருஜீ அவர்கள் ஊழலை விசாரிக்க உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஒருநபர் கமிசன் ஒன்றை நிறுவினார்.
 ஒருநபர் கமிசன் மிகக்குறுகிய காலத்தில் விசாரணை முடித்து அறிக்கையை தாக்கல் செய்தது. முந்த்ராவுக்கு 22ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.எல்.ஐ.சியின் இழப்பை விசாரிக்க முந்த்ராவை தோண்டிய போது கிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதையாக பங்கு மார்கெட்டில் முந்த்ரா புகுந்து விளையாடிய கதையும் வெளிச்சத்துக்கு வந்தது.
 பிரிட்டிஸ்-இந்தியா நிருவனத்தின் பங்குகளை 12 ரூபாய்க்கு வாங்கி முந்த்ராவே 14 ரூபாய்க்கு ஏற்றி விற்பனை செய்வது.இப்படிச் செய்வதன் மூலம் பங்கின் மதிப்பை செயற்கையாக உயர்த்தி மக்களை ஏமாற்றுவது.

 சாதராண முந்த்ராவிற்கு நிதி எங்கிருந்து வந்தது.தனது சட்டைப்பையில் நிதியமைச்சர் டி.டி.கே அப்புறம் என்ன? தேசிய வங்கிகளின் தாராளமயம்.முந்த்ராவுக்கு வங்கிகள் முதலீடு செய்கின்றன.

 இதன் தொடர்சியாக பங்குச்சந்தை பெறும் சரிவை சந்திக்கிறது.தனது ஆட்டத்தை தக்கவைத்துக் கொள்ள தானே அச்சடித்த பொய்யான பத்திரங்களை வெளியிடுகிறார்.ரிசர்வ் வங்கியின் அதிகாரி இராமன் முந்த்ராவின் அதிரடி ஆட்டத்தை ரிசர்வ் வங்கித் தலைமையின் பார்வைக்கு எடுத்துச்செல்கிறார்.
 முந்த்ராவின் ஊழல் கோப்பு நிதிஅமைச்சர் டி.டி.கே.கிருஸ்ணமாச்சாரியின் பார்வைக்கு வருகிறது."இதை படிப்பதற்கு மகிழ்ச்சியாக இல்லை இது தேவயற்றது"எனக் குறிப்பெழுதி திருப்பி அனுப்பினார்.நடவடிக்கை எடுக்க வேண்டிய டி.டி.கே இந்தியாவின் மிகப்பெரிய முதல் ஊழலுக்கு துணை போனார்.

  இதன் விளைவு ஆண்டிமுத்துராசாவை கதநாயகனாக கொண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய்களாக ஊழலின் விருச்சம் விரிந்துள்ளது.

 இதை விட பெரிய ஊழல்கள் இப்போதும் நடந்து கொண்டிருக்கலாம்.யார் காண்டது?யாருக்கு ஊழலைப் பற்றிய கவலை?தேர்தல் வருகிறதா?குவாட்டரும்,பிரியாணியும் கிடைகிறதா?ஓட்டுக்கு ஐநூறும்,ஆயிரமும் பாக்கெட்டுக்கு வருகிறதா? கவலை ஓய்ந்தது!
1947-ல் வெள்ளையர்களிடம் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம்!
இன்று லஞ்சம்-ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமை!
தேசத்தையும்,தேசியத்தையும் மீட்டெடுக்க "ஊழல் ஒழிப்பு முன்னனி" 
என்ற மக்கள் கட்டமைப்புத்தேவை! 
தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,சுற்றுச்சூழல்,குற்றவியல்,புலனாய்வு,செய்தி ஊடகப்பதிவிற்காக- டி.கே.தீரன்சாமி.   
பதிவைப்பார்த்தவர்கள்கருத்துரைகளைபதியவும் 

செவ்வாய், 25 ஜனவரி, 2011


உலகம் தோன்றிய நாள் முதல் மனிதகுல வரலாற்றில் ஆண்டான் அடிமை சாசனம் கால இடைவெளி இல்லாமல் அனைத்து நூற்றாண்டுகளிலும் 

இடைவிடாது நடந்துவரும் சமூக-வன்கொடுமை.

 நமது பாரததேசம் இருநூறு ஆண்டுகள் தொடர்ந்து மொகளாயர்கள் மற்றும் வெள்ளையர்களின் கீழ் அடிமைப்பட்டு ஏராளமான இயற்கை வளங்களை அந்நியர்களிடம் அள்ளிக்கொடுத்தோம். முதல் இந்திய சுதந்திரப்போராட்டம்  தென்இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்  புலித்தேவன்,வீரபாண்டியகட்டபொம்மன் இவர்களுக்கு பிறகு மருதுசகோதரர்கள், வேலுநாச்சியார்,ஊமத்துரை வரிசையில் தமிழகத்தின் இதயப்பகுதியான கொங்குநாட்டுக்கு உட்பட்ட 24நாடுகளில் காங்கயம்நாட்டில் மேளப்பாளையம் கொங்குவேளாளர் சாதீ பயிரன் கூட்டத்தைச்சார்ந்த இரத்தினம்-பெரியாத்தாள் தம்பதியர்களுக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர்தான் தீர்த்தகிரிக்கவுண்டர் என்னும் தீரன்சின்னமலை.

 1790க்கும் மேற்பட்டகாலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து வீரப்போர்புரிந்து தூக்குமேடையில் நம்நாட்டு விடுதலைக்காக தம் இன்னுயிரை துறந்தவர்தான் தீரன்சின்னமலை.அடிமைதலைக்கு எதிரான போராட்டத்தின் மொத்தவடிவத்தை குறுகியசாதீ வட்டத்தில் வைத்து சிறுமைபடுத்துவதை நாம் முற்றிலும் கைவிடவேண்டும்.

 தீரன்சின்னமலையின் கொங்குபடையில் கறுப்புச்சேர்வைதேவர்,கட்டுத்தரிநாடார்,ஆதிதிராவிடர்சுபேதர்வேலப்பன்,அருந்ததியர்சமூகத்தைசார்ந்த செறுப்புத்தைக்கும்தொழிலாளி பொல்லான்,ஆருயிர்நண்பனாக-வழிகாட்டும் தளபதியாக இஸ்லாமிய மாவீரன் கன்னடத்துப்புலி திப்புசுல்தான்,பத்தேமுகமதூசேன்,போர்ப்பயிற்சி அளித்த வெள்ளை இனத்தை சார்ந்த பிரான்சு வீரர்கள்,விருபாச்சிகோபாலநாய்க்கர்,வன்னியர்சமூகவீரர்கள்,என அனைத்துச்சமூகத்தை சார்ந்தவர்களும் சின்னமலையின்போர்படையில் வீரப்போர்புரிந்து நாம் இன்று ருசிக்கும் சுதந்திரத்திற்காக அன்றே மரணத்தை முத்தமிட்டார்கள். 

  மண்ணுரிமைக்காக மகத்தான தியாகம் செய்த மாவீரர்களின் பாதம்தொட்டு சமூக-அரசிய்ல்-சுற்றுச்சூழல்-குற்றவியல்-புலானாய்வு-செய்திகளை-கருத்துகளை இந்த வலைதளம் வாயிலாக உங்களுடன் -நீங்கள் எங்களுடன் உண்மைகளை உலகத்தின் பார்வைக்கு எடுத்துச்செல்வோம். டி.கே.தீரன்சாமி...மாவீரன் தீரன்-